மேலும் அறிய

தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் "யானைகுத்தி பட்டான்  நடுகல்"

’’யானைகளால் விளைநிலங்களுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில் தந்தத்திற்காக வேட்டையாடும் போது அதனுடன் போர் செய்து வீரமரணம் அடைந்திருக்க வேண்டும்'’

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரின் அருகே உள்ள மயிலாடும் பாறையிலிருந்து சிறிய தொலைவில் அமைந்து உள்ளது தங்கம்மாள்புரம் என்னும் கிராமம். மூங்கிலாறு எனப்படும் தங்கம்மாள்புரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பொட்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் யானைகுத்தி பட்டான் என்ற நடுகல் உள்ளது. பண்டைய காலத்தில் இங்கு யானைகள் அதிகமாக வாழ்ந்து இருக்கக் கூடும் என்பதை இது உணர்த்துகிறது.

தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்

யானைகளால் விளைநிலங்களுக்கும், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில் தந்தத்திற்காக வேட்டையாடும் போது அதனுடன் போர் செய்து வீரமரணம் அடைந்திருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விலங்குகளுடன் போரிட்டு இறந்த வீரனின் நினைவாக நடுகல் அமைக்கப்படுவது வரலாற்று மரபாகும்.

மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மூத்தகுடி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் குறித்த பொருள்களும், பண்டைய கால மக்களின் வாழ்வாதாரங்களை எடுத்துக்காட்டும் விதமாகவும் கல்வெட்டுகள், சிற்பங்கள் என தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் நடுகல். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் கல்வெட்டுகள், படைப்புச் சிற்பங்கள் என தொல்லியல் பறைசாற்றுவதாக பல வரலாற்று சுவடுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாக ஆய்வாளர்கள் பார்ப்பது நடுகற்கள் தான்.   இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள புள்ளி மான் கோம்பை எனும் சிற்றூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவின. 

தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்

தற்போது இங்கு 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கூறும், யானையுடன் போரிட்டு இறந்த வீரனுக்கு நினைவு செலுத்தும் வகையில் யானைகுத்தி பட்டான் என்ற நடுகல் உள்ளது . இந்த கல்லில் தன்கையில் எந்தவித ஆயுதமும் இன்றி யானையுடன் வீரன் போரிடுவது போன்ற படைப்பு சிற்பங்கள் வெட்டப்பட்டிருக்கிறது. அதன்கீழ் வீரன் தனது 2 மனைவிகளுடன் அமர்ந்த நிலையில் உள்ளது. இதன்மூலம் அந்த காலத்திலேயே வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்ந்துள்ளனர் என்பது இந்த நடுகற்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்

இதே போல  பிற்கால பாண்டிய காலத்தில் அழநாடு என்று அழைக்கப்பட்டு வந்தது தேனி மாவட்டம். அதன்படி ஓரமில் என்ற பெயருடைய இன்றைய மயிலாடும்பாறை என்ற ஊரில் இருந்து 10 கி.மீ தொலைவில் மலைகளால் சூழ்ந்த வெம்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படும் நெடுங்கல் அல்லது குத்துக்கல் ஒரே இடத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்த  நெடுங்கற்கள் பண்டைய காலத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் எழுப்பப்படும் ஈம நினைவுச் சின்னமாகும். இந்த சின்னங்கள் குறித்து சங்க இலக்கியங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இயற்கையாக ஒழுங்கற்ற பெரிய உயரமாக செதுக்கப்பட்ட கற்களை கொண்டு இந்த நினைவு சின்னங்கள் அமைக்கப்படும்.


தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்

வெம்பூர் கிராமத்தில் ஒரே இடத்தில் அதிகளவில் நெடுங்கற்கள் காணப்படுகின்றன. வரலாற்று சான்றுகளை எடுத்துகூறும் இதுபோன்ற அரியவகை கற்கள் மற்றும் சிற்பங்கள் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் சிதிலமடைந்து வருகிறது. எனவே தொல்லியல் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்தால் கீழடி போன்ற பல அரிய தமிழர்களின் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

 

https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
மதுரையில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் பலி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது !
மதுரையில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் பலி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது !
Madurai ; கீழடி முதல் அழகர்கோயில் வரை... தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்ட ஆர்வலர்கள் !
Madurai ; கீழடி முதல் அழகர்கோயில் வரை... தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்ட ஆர்வலர்கள் !
மதுரை மின்தடை ஏற்படும் கடைசி லிஸ்ட்... ( 27.05.26) நாளை இந்த இடங்களில் தான் கரண்ட் இருக்காது !
மதுரை மின்தடை ஏற்படும் கடைசி லிஸ்ட்... ( 27.05.26) நாளை இந்த இடங்களில் தான் கரண்ட் இருக்காது !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
MG Majestor Vs Toyota Fortuner: ‘ஃபார்ச்சூனர விட கெத்துல குறைச்சல் இல்ல, ஆனா விலையோ அதவிட கம்மி‘; சவாலாக மாறிய MG மஜெஸ்டர்
‘ஃபார்ச்சூனர விட கெத்துல குறைச்சல் இல்ல, ஆனா விலையோ அதவிட கம்மி‘; சவாலாக மாறிய MG மஜெஸ்டர்
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
Embed widget