மேலும் அறிய

தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் "யானைகுத்தி பட்டான்  நடுகல்"

’’யானைகளால் விளைநிலங்களுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில் தந்தத்திற்காக வேட்டையாடும் போது அதனுடன் போர் செய்து வீரமரணம் அடைந்திருக்க வேண்டும்'’

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரின் அருகே உள்ள மயிலாடும் பாறையிலிருந்து சிறிய தொலைவில் அமைந்து உள்ளது தங்கம்மாள்புரம் என்னும் கிராமம். மூங்கிலாறு எனப்படும் தங்கம்மாள்புரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பொட்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் யானைகுத்தி பட்டான் என்ற நடுகல் உள்ளது. பண்டைய காலத்தில் இங்கு யானைகள் அதிகமாக வாழ்ந்து இருக்கக் கூடும் என்பதை இது உணர்த்துகிறது.

தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்

யானைகளால் விளைநிலங்களுக்கும், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில் தந்தத்திற்காக வேட்டையாடும் போது அதனுடன் போர் செய்து வீரமரணம் அடைந்திருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விலங்குகளுடன் போரிட்டு இறந்த வீரனின் நினைவாக நடுகல் அமைக்கப்படுவது வரலாற்று மரபாகும்.

மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மூத்தகுடி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் குறித்த பொருள்களும், பண்டைய கால மக்களின் வாழ்வாதாரங்களை எடுத்துக்காட்டும் விதமாகவும் கல்வெட்டுகள், சிற்பங்கள் என தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் நடுகல். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் கல்வெட்டுகள், படைப்புச் சிற்பங்கள் என தொல்லியல் பறைசாற்றுவதாக பல வரலாற்று சுவடுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாக ஆய்வாளர்கள் பார்ப்பது நடுகற்கள் தான்.   இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள புள்ளி மான் கோம்பை எனும் சிற்றூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவின. 

தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்

தற்போது இங்கு 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கூறும், யானையுடன் போரிட்டு இறந்த வீரனுக்கு நினைவு செலுத்தும் வகையில் யானைகுத்தி பட்டான் என்ற நடுகல் உள்ளது . இந்த கல்லில் தன்கையில் எந்தவித ஆயுதமும் இன்றி யானையுடன் வீரன் போரிடுவது போன்ற படைப்பு சிற்பங்கள் வெட்டப்பட்டிருக்கிறது. அதன்கீழ் வீரன் தனது 2 மனைவிகளுடன் அமர்ந்த நிலையில் உள்ளது. இதன்மூலம் அந்த காலத்திலேயே வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்ந்துள்ளனர் என்பது இந்த நடுகற்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்

இதே போல  பிற்கால பாண்டிய காலத்தில் அழநாடு என்று அழைக்கப்பட்டு வந்தது தேனி மாவட்டம். அதன்படி ஓரமில் என்ற பெயருடைய இன்றைய மயிலாடும்பாறை என்ற ஊரில் இருந்து 10 கி.மீ தொலைவில் மலைகளால் சூழ்ந்த வெம்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படும் நெடுங்கல் அல்லது குத்துக்கல் ஒரே இடத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்த  நெடுங்கற்கள் பண்டைய காலத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் எழுப்பப்படும் ஈம நினைவுச் சின்னமாகும். இந்த சின்னங்கள் குறித்து சங்க இலக்கியங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இயற்கையாக ஒழுங்கற்ற பெரிய உயரமாக செதுக்கப்பட்ட கற்களை கொண்டு இந்த நினைவு சின்னங்கள் அமைக்கப்படும்.


தமிழர்களுக்கும் யானைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும்

வெம்பூர் கிராமத்தில் ஒரே இடத்தில் அதிகளவில் நெடுங்கற்கள் காணப்படுகின்றன. வரலாற்று சான்றுகளை எடுத்துகூறும் இதுபோன்ற அரியவகை கற்கள் மற்றும் சிற்பங்கள் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் சிதிலமடைந்து வருகிறது. எனவே தொல்லியல் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்தால் கீழடி போன்ற பல அரிய தமிழர்களின் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

 

https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
Embed widget