மேலும் அறிய

வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி! திண்டுக்கல் அருகே பரபரப்பு - என்ன நடந்தது?

திண்டுக்கல் அருகே வந்தே பாரத் ரயிலின் ஏ.சியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது.

வந்தே பாரத் ரயிலில் இன்று திடீரென புகை வந்ததால் பரபரப்பு எற்பட்டது. திண்டுக்கல் அருகே வந்தே பாரத் ரயிலின் ஏ.சியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ஒரு அதிவேக ரயில் சேவையாகும். இது "Train 18" என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, 2019-ல் முதல் முறையாக இயக்கத்துக்கு வந்தது. இந்தியாவில் முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட இந்த ரயில், "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கக தரமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இது முழுவதுமாக ஏர் கண்டிஷன்ட் கொண்டது. வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை.

இந்த நிலையில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் இடையே, நல்ல வரவேற்பு உள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.  இந்த ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது வேல்வார்கோட்டை அருகே திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து கரும்புகை வெளியேறியது.


வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி! திண்டுக்கல் அருகே பரபரப்பு - என்ன நடந்தது?

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். மேலும், ஆபத்தை உணர்ந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலி பிடித்து இழுத்தனர். ஏ.சி.யில் இருந்து புகை கிளம்பியதால் வடமதுரை அருகே வேல்வார்கோட்டை என்ற இடத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில்வே கார்டு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டியில் சோதனை செய்தனர். இதில், ஏசியில் ஏற்பட்ட கோளாறால் கரும் புகை வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து, ஏசியில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப நிபுணர்கள் பழுதை சரி செய்தனர்.


வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி! திண்டுக்கல் அருகே பரபரப்பு - என்ன நடந்தது?

அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டு, அதன் பிறகு வந்தே பாரத் ரயில் கிளம்பியது. வந்தே பாரத் ரயில் நடுவழியில் நின்றதால் அந்த வழியாக செல்லக்கூடிய மற்ற ரயில்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. உடனடியாக, புகை வந்த பகுதியில் இருந்த பயணிகள் மாற்றுப் பெட்டிக்கு மாற்றப்பட்டுள்ளனர். முழுவதும் ஏசி வசதி கொண்ட ரயில் என்பதால் கண்ணாடிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதால் பயணிகள் பத்திரமாக மாற்ற கம்பார்ட்மென்ட்க்கு மாற்றப்பட்டனர். ஏ.சியில் பழுது நீக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு கருதி பின்னர் ரயிலின் வேகத்தை அதன் ஒட்டுநர்கள் குறைத்து திருச்சிக்கு கொண்டு சென்றனர். வந்தே பாரத் ரயிலில் திடீரென இன்று கரும் புகை வெளியேறிய சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் குழந்தைகளின் நலனுக்கு ரூ.1.13 கோடியில் 6 அங்கன்வாடி மையங்கள் திறப்பு !
விருதுநகர் குழந்தைகளின் நலனுக்கு ரூ.1.13 கோடியில் 6 அங்கன்வாடி மையங்கள் திறப்பு !
மதுரை விதிமீறல் கட்டடங்கள்: 94 அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரை விதிமீறல் கட்டடங்கள்: 94 அதிகாரிகள் மீது நடவடிக்கை, உயர் நீதிமன்றம் அதிரடி!
இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !
இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !
Madurai ; நவீன யுகத்திலும் மாறாத மரபு: 21 மாட்டு வண்டிகளில் அழகர்கோயில் யாத்திரை!
Madurai ; நவீன யுகத்திலும் மாறாத மரபு: 21 மாட்டு வண்டிகளில் அழகர்கோயில் யாத்திரை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget