மேலும் அறிய

தைப் பொங்கல் தெரியும்.. அது என்ன செவ்வாய் பொங்கல்; சிவகங்கையில் ஓர் பாரம்பரிய நிகழ்ச்சி

புதிய உறவுகள் மலரும் - இருமனங்கள் இணையும் திருமணங்கள் நிகழ்ந்தேறும் சிவகங்கை செவ்வாய் பொங்கல்.

நாட்டரசன் கோட்டையில் 200 ஆண்டுகளாக நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் தை மாதம் முதல் செவ்வாய் அன்று கொண்டாடப்பட்டது. 900 க்கும்  மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
 

செவ்வாய் பொங்கல் 2025

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் புகழ்பெற்ற செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சி நேற்று மாலை துவங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் அன்று செவ்வாய் பொங்கல் நடைபெறும். நாட்டரசன்  கோட்டையை பூர்வீகமாக கொண்ட நகரத்தார்கள் தங்கள் பணி நிமித்தம் காரணமாக வெளியூர்களிலும், வெளி நாடுகளில் இருந்தாலும் செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு குடும்பத்தை ஒரு புள்ளி என்று கணக்கில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புள்ளிகளின் பெயரை சீட்டாக வெள்ளி  பானையில் போட்டு ஒரு சீட்டை மட்டும் தேர்வு செய்து சிறப்பு பொங்கல் வைக்க அனுமதிப்பார்கள். அவர்கள் மட்டும் மண்பானையில் பொங்கலிட்டு கிடாய் வெட்டுவார்கள். மற்ற நபர்கள் வெள்ளி அல்லது வெங்கல பானையில் பொங்கல் வைத்து விரும்பினால் கிடாய் வெட்டுவார்கள். இந்நிலையில் இந்தாண்டு 900க்கும்  மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
 
 

புதிய உறவுகள் மலரும் செவ்வாய் பொங்கல்

 
நம் முன்னோர்கள் பண்டிகைகள், கொண்டாட்டங்களை காரணமில்லாமல் வைத்ததில்லை. உறவுகள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை நாட்களில் புதிய உறவுகள் மலரும். இருமனங்கள் இணையும் திருமணங்கள் நிகழ்ந்தேறும் என்று நினைத்து இதுபோன்ற பொங்கல் பண்டிகைகளை தலைமுறைகள் தாண்டி கொண்டாடி வருகின்றனர். நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை நகரத்தார் சமுதாய மக்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். 
 

நகரத்தார் சார்பில் 916 பேர் பொங்கல்

வழக்கம் போல நிகழாண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை நேற்று மாலை தொடங்கியது. முதல் பொங்கல் பானை வைக்க தேர்வு செய்யப்பட்ட மு.பழ.அ.கண.அ.ராமசாமி செட்டியார் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 5 மணிக்கு பொங்கல் வைக்க தொடங்கியவுடன் தொடர்ந்து மற்றவர்களும் பொங்கலிட தொடங்கினர். முதல் பொங்கல் பானை மட்டும் மண் பானையிலும் மற்றவர்கள் வெண்கல, சில்வர் பானைகளிலும் பொங்கல் வைத்தனர். நகரத்தார் சார்பில் 916 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர மற்ற சமூகத்தினர், நேர்த்திக்கடன் வைத்துள்ள நூற்றுக்கணக்கானவர்களும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். அனைவரும் வெண் பொங்கல் மட்டுமே வைத்தனர். இவ்வாறு கோயில் முன் அமைந்துள்ள இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பெண்கள் வரிசையாக பொங்கலிடும் நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
தேனி: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு தீவிரம்! பதற்றமான வாக்குச்சாவடிகளில் ராணுவப் படை குவிப்பு!
தேனி: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு தீவிரம்! பதற்றமான வாக்குச்சாவடிகளில் ராணுவப் படை குவிப்பு!
உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழகத்தில் 3 நாட்களில் மூடப்படும் அபாயம்! அமைச்சர் பதில் என்ன?
உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழகத்தில் 3 நாட்களில் மூடப்படும் அபாயம்! அமைச்சர் பதில் என்ன?
கேஸ் தட்டுப்பாடு: உணவகங்கள் மூடல்! காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா கேள்வி - பாஜக பதில் என்ன?
கேஸ் தட்டுப்பாடு: உணவகங்கள் மூடல்! காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா கேள்வி - பாஜக பதில் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget