மேலும் அறிய
என் பெயரை பயன்படுத்த வேண்டாம்.. முன்னாள் அமைச்சர் மனுவின்படி நீதிமன்றம் ரத்து செய்தது
ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் - என மனுவில் கோரியிருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.
விஜயபாஸ்கர் அளித்த மனு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேர்தல் மூலமாக தமிழ்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டு பிரபலமான நபராக பணியாற்றேன். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022ல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவ்விதமான அடிப்படையும் இல்லாமல் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
விபரங்களை ரத்து செய்து உத்தரவு
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், " விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி இளைந்திரையன், "ஆறுமுகசாமி, ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Ajith in Next Race; அசத்தும் அஜித் குமார்; அடுத்த ரேசுக்கு செலெக்ட் ஆயிட்டார்... இதோ அப்டேட்...
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















