TNEB : உங்க பகுதியில் திடீர் மின்தடை? அப்போ இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!
மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். இது போன்ற மின் தடை பிரச்னைகள் இரவு நேரங்களில் ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது.
இன்றிருக்கும் நவீன தொழில் நுட்பத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது மின்சாரம். மின் சார தேவை என்பது கிராம மற்றும் நகர் பகுதிகளில் அதன் தேவைக்கேற்ப மாறுபடும். அதேபோல மின்சார பணிகளில் ஈடுபடும் ஊழியர்களும் மிகுந்த பணிச்சுமைக்கும் ஆளாகின்றனர். அப்படி அதிக பணிச்சுமையின் போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் தடை சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு மின்சாரத்துறை பணியாளர்களை அனுகுவதுண்டு. அப்படி வரும் புகார்களை மின்சாரத்துறை ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் அலட்சியமாக செயல்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.
குறிப்பாக உங்களது வீடுகளிலோ, கடைகளிலோ இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும். அல்லது மின் இணைப்பு விட்டு, விட்டு கிடைக்கும். மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். இது போன்ற மின் தடை பிரச்னைகள் இரவு நேரங்களில் ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது.
பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும். அல்லது அப்பகுதி லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும். அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்.
இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல யோசனை உள்ளது தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : TN EB CUSTOMER CARE : 9498794987
இதையும் படிங்க : டெல்லியின் அடுத்த முதல்வர் ரேகா குப்தா.. பாஜகவின் அதே ஃபார்முலா.. ஓகே சொன்ன மோடி!
என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும். தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்.
அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும். அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள். இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம். இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

