மேலும் அறிய

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு! பயணிகளின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?

மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்கிழமைதோறும் மாலை 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை, பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். 

ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் சேலம் ரயில்வே கோட்டம், கூட்டநெரிசல் மிக்க ரயில்வே வழித்தடங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சேலம் கோட்டத்திலிருந்து வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பயணிகளின் பயன்பாட்டை கருத்தில்கொண்டு, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டும் வருகிறது.


720

அந்த வகையில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06030), ஞாயிற்றுக்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். அதே ரயில், மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலாக (06029), மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்கிழமைதோறும் மாலை 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில்கள் சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலையாச்சிப்பேட்டை, கோயம்புத்தூர், பொள்ளாச்சிப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயிலில் ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, படுக்கை வகுப்பு, முன்பதிவு இல்லாத வகுப்புகளும் உள்ளன.


திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு! பயணிகளின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?

இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வரை, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதேபோன்று கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை அரசுப் பொருட்காட்சி: மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! பல லட்சம் வருவாய் ஈட்டி சாதனை!
மதுரை அரசுப் பொருட்காட்சி: மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! பல லட்சம் வருவாய் ஈட்டி சாதனை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget