மேலும் அறிய

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் உயிரிழந்த விவகார வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தவு

வழக்கில் குற்றவாளிகள் ஆஜராகாமல் தாமதித்தால், வாரண்ட் அனுப்பி ஆஜராகச்செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

நெல்லை செஷன்ஸ் நீதிமன்றம் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் உயிரிழந்த விவகார வழக்கு விசாரணையை தொடங்கும் வகையில், இரண்டு வாரங்களுக்கு உள்ளாக அதற்கான ஆவணங்களை அனுப்ப நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த கோபி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2017 ஆம் ஆண்டு கந்துவட்டி கொடுமை காரணமாக சுப்புலட்சுமி, இசக்கிமுத்து அவரது குழந்தைகள் இருவர் என 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட முத்துலட்சுமி, தளவாய் ராஜ், காளி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு நெல்லை நீதித்துறை நடுவர் முன்பாக நடைபெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக ஆஜராவதில்லை.  சம்பவம் நிகழ்ந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது போல் உள்ளது. ஆகவே இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், நெல்லை செஷன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை  தொடங்கும் வகையில், இரண்டு வாரங்களுக்கு உள்ளாக அதற்கான ஆவணங்களை அனுப்ப நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். வழக்கில் குற்றவாளிகள் ஆஜராகாமல் தாமதித்தால், வாரண்ட் அனுப்பி ஆஜராகச்செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்

 


மற்றொரு வழக்கு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 9 லட்ச ரூபாயை 6% வட்டியுடன்,   12 வாரங்களுக்குள்  வழங்க தமிழ்நாடு மின்வாரியத்திற்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்"எனது கணவர் பழனிசாமி விவசாயம் செய்வதற்காக எங்களுக்கு சொந்தமான நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மின் கம்பத்துடன் கேபிள் டிவி வயர் இணைக்கப்பட்டிருந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக கேபிள் வயர் அறுந்துள்ளது. கேபிள் டிவியின் வயர், விவசாயப் பணிகளை கவனிக்கச் சென்ற எனது கணவரின் தலையில் பட்டதில் சம்பவ இடத்திலேயே எனது கணவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், மின்சாரம் தாக்கி தான் அசர் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது கணவர் மட்டுமே எங்களது குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபராக இருந்த நிலையில், தற்பொழுது எனது கணவர் இறப்புக்குப் பிறகு நானும் எனது பிள்ளைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். ஆகவே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த எனது கணவரின் மரணத்திற்கு இழப்பீடாக 15 லட்ச ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், "மின் கம்பத்துடன் சட்டவிரோதமாக கேபிள் டிவி வயர் இணைக்கப்பட்டு இருந்ததை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இத்தகைய விபத்து நிகழ்ந்திருக்காது. அந்நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே, மனுதாரரின் கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். எனவே மனுதாரருக்கு 9, லட்சத்து 7 ஆயிரத்து 104 ரூபாயை, 12.6.2006  முதல் தற்பொழுது வரை ஆண்டுக்கு 6% வட்டியுடன் இணைத்து 12 வாரத்திற்குள் வழங்க தமிழ்நாடு மின்வாரிய தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget