மேலும் அறிய
இந்தியா கூட்டணியில் ஈகோ பிரச்சனை... திருமாவளவன் என்ன சொல்ல வருகிறார்..?
திருப்பரங்குன்றத்திலே மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை. நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம் - திருமாவளவன் கருத்து

தொல்.திருமாவளவன்
Source : twitter
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை
வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் ஆனால் அது தேசத்திற்கான பின்னடைவு என கருத வேண்டி இருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் நியாயமாக முறையில் நடைபெற்றதா என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ் ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. டெல்லி தேர்தல் அடிப்படையாகக் கொண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் சந்திக்க வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது. ஈரோடு எதிர்பார்த்த வெற்றியை திமுக பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு:
பல சந்தர்ப்பங்களின் அதிகாரிகள் எடுக்கிற சட்ட ஒழுங்கு சார்ந்த நிலைப்பாடுகள் தான் சமூக பதட்டங்களுக்கு வலியுறுத்தின, எல்லா பிரச்னைகளையும் சட்டம் ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அணுகுகிறார். பாதிக்கப்பட்ட ஒரு பக்கம் நின்று அவர்களுக்கான நீதி சிறுபான்மையினர் பக்கம் நின்று அவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையிலான அணுகுமுறை என்கிற ஒரு நிலைப்பாடு அதிகாரி இடத்திலே இருப்பதில்லை. அவர்களாக கற்பனை செய்து கொள்வது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடும் ஆதனால் நாங்கள் தடை உத்தரவு போடுகிறோம் என்று மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த முடிவு இந்த நிலைக்கு காரணமாக அமைந்தது அதற்கு முன்னதாக வழக்கமாக சிறுபான்மையினர் மேற்கொண்டு நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து அவர்களை அங்கே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது இதற்கு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது ஆட்சி நிர்வாகத்திற்கு அல்லது ஆளுங்கட்சிக்கு இது போன்ற நெருக்கடிகளை அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்களின் அணுகுமுறையால் வருகிறார்கள் திருப்பரங்குன்றத்திலே மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு:
பாலியல் குற்றத்தை அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகிறது என்பது புள்ளி விவரங்களில் தெரிகிறது. எப்படி தலித்துகளுக்கு சிறுபான்மையினருக்கு எதிராக குற்றங்கள் பெருகி வருகிறதோ அப்படித்தான் பாலியல் குற்றங்களும் பெருகி வருகிறது பாலியல் குற்றங்களை பெருகுவதை காவல்துறை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது கர்ப்பிணி பெண்ணுக்கு எதிராக செய்த குற்றவாளியை மானவிக்கு எதிராக குற்றங்களை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு காவல்துறையில் இதுக்கென்று தனி உளவு பிரிவை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion