மேலும் அறிய

Thiruparankundram: அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலிகடா - செல்லூர் ராஜூ காட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பிரச்னைகளுக்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை - செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலி கடா ஆக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் எனவும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
 
அ.தி.மு.க.,வினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
 
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் அதிமுக பிரதிநிதி பங்கேற்று, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு கையெழுத்திடவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில்,"திருப்பரங்குன்றம் சட்டம் ஒழுங்கு மக்கள் பிரச்னையில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது, அமைதிப் பேச்சுவார்த்தையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டது வேதனை அளிக்கிறது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண்பழி சுமத்துகிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அழைக்காமல் உண்மைக்கு புறம்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ராஜன் செல்லப்பா பேட்டி
 
பின்னர் ராஜன் செல்லப்பா அளித்த பேட்டியில், "திருப்பரங்குன்றம் மக்கள் பிரதிநிதியான என்னை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிமுக பங்கேற்றுள்ளதாக பொய்யான தகவலை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சி தூண்டுதலின் காரணமாக அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண் பழி போட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்ப பெற வேண்டும். யாரோ எழுதி அனுப்பிய அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார், மாவட்ட ஆட்சியர் அறிக்கை திரும்பப் பெறாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். யாரோ சொன்னதால் தான் அறிக்கையில் அதிமுக பேரை குறிப்பிட்டுள்ளேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலைக்கோவில் வழிபாடு விவகாரத்தில் 3 ஆண்டுகளாக பிரச்னை நடைபெற்று வருகிறது. நிர்வாகம் சரியாக இருந்திருந்தால் திருப்பரங்குன்றத்தில் பிரச்னை இருக்காது, மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முறையாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு வந்த அழுத்தத்தின் காரணமாகவே அறிக்கையில் அதிமுக குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நிலைப்பாடு குறித்து கூற முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுடைய நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார்" என கூறினார். 
 
செல்லூர் ராஜூ பேட்டி
 
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பிரச்னைகளுக்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தமிழகத்தில் உளவுத்துறை என்ன செய்கிறது? தமிழ்நாடு அரசு செயல்படாத அரசாக உள்ளது. முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு ஆட்சியரை பலிகடாக ஆக்கி உள்ளது" என கூறினார்
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025 Wishes: ஜெய் ஹிந்த்.. ஜெய்ஹிந்த்! சுதந்திர தினத்தை போற்றும் இந்த வாழ்த்துகளை ஷேர் பண்ணுங்க..!
Independence Day 2025 Wishes: ஜெய் ஹிந்த்.. ஜெய்ஹிந்த்! சுதந்திர தினத்தை போற்றும் இந்த வாழ்த்துகளை ஷேர் பண்ணுங்க..!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Embed widget