மேலும் அறிய

Thiruparankundram: அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலிகடா - செல்லூர் ராஜூ காட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பிரச்னைகளுக்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை - செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலி கடா ஆக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் எனவும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
 
அ.தி.மு.க.,வினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
 
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் அதிமுக பிரதிநிதி பங்கேற்று, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு கையெழுத்திடவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில்,"திருப்பரங்குன்றம் சட்டம் ஒழுங்கு மக்கள் பிரச்னையில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது, அமைதிப் பேச்சுவார்த்தையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டது வேதனை அளிக்கிறது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண்பழி சுமத்துகிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அழைக்காமல் உண்மைக்கு புறம்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ராஜன் செல்லப்பா பேட்டி
 
பின்னர் ராஜன் செல்லப்பா அளித்த பேட்டியில், "திருப்பரங்குன்றம் மக்கள் பிரதிநிதியான என்னை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிமுக பங்கேற்றுள்ளதாக பொய்யான தகவலை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சி தூண்டுதலின் காரணமாக அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண் பழி போட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்ப பெற வேண்டும். யாரோ எழுதி அனுப்பிய அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார், மாவட்ட ஆட்சியர் அறிக்கை திரும்பப் பெறாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். யாரோ சொன்னதால் தான் அறிக்கையில் அதிமுக பேரை குறிப்பிட்டுள்ளேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலைக்கோவில் வழிபாடு விவகாரத்தில் 3 ஆண்டுகளாக பிரச்னை நடைபெற்று வருகிறது. நிர்வாகம் சரியாக இருந்திருந்தால் திருப்பரங்குன்றத்தில் பிரச்னை இருக்காது, மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முறையாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு வந்த அழுத்தத்தின் காரணமாகவே அறிக்கையில் அதிமுக குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நிலைப்பாடு குறித்து கூற முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுடைய நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார்" என கூறினார். 
 
செல்லூர் ராஜூ பேட்டி
 
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பிரச்னைகளுக்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தமிழகத்தில் உளவுத்துறை என்ன செய்கிறது? தமிழ்நாடு அரசு செயல்படாத அரசாக உள்ளது. முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு ஆட்சியரை பலிகடாக ஆக்கி உள்ளது" என கூறினார்
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget