மேலும் அறிய

Thiruparankundram: அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலிகடா - செல்லூர் ராஜூ காட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பிரச்னைகளுக்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை - செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலி கடா ஆக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் எனவும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
 
அ.தி.மு.க.,வினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
 
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் அதிமுக பிரதிநிதி பங்கேற்று, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு கையெழுத்திடவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில்,"திருப்பரங்குன்றம் சட்டம் ஒழுங்கு மக்கள் பிரச்னையில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது, அமைதிப் பேச்சுவார்த்தையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டது வேதனை அளிக்கிறது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண்பழி சுமத்துகிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அழைக்காமல் உண்மைக்கு புறம்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ராஜன் செல்லப்பா பேட்டி
 
பின்னர் ராஜன் செல்லப்பா அளித்த பேட்டியில், "திருப்பரங்குன்றம் மக்கள் பிரதிநிதியான என்னை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிமுக பங்கேற்றுள்ளதாக பொய்யான தகவலை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சி தூண்டுதலின் காரணமாக அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண் பழி போட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்ப பெற வேண்டும். யாரோ எழுதி அனுப்பிய அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார், மாவட்ட ஆட்சியர் அறிக்கை திரும்பப் பெறாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். யாரோ சொன்னதால் தான் அறிக்கையில் அதிமுக பேரை குறிப்பிட்டுள்ளேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலைக்கோவில் வழிபாடு விவகாரத்தில் 3 ஆண்டுகளாக பிரச்னை நடைபெற்று வருகிறது. நிர்வாகம் சரியாக இருந்திருந்தால் திருப்பரங்குன்றத்தில் பிரச்னை இருக்காது, மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முறையாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு வந்த அழுத்தத்தின் காரணமாகவே அறிக்கையில் அதிமுக குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நிலைப்பாடு குறித்து கூற முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுடைய நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார்" என கூறினார். 
 
செல்லூர் ராஜூ பேட்டி
 
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பிரச்னைகளுக்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தமிழகத்தில் உளவுத்துறை என்ன செய்கிறது? தமிழ்நாடு அரசு செயல்படாத அரசாக உள்ளது. முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு ஆட்சியரை பலிகடாக ஆக்கி உள்ளது" என கூறினார்
 
 

தலைப்பு செய்திகள்

பழனி மட நில மோசடி: வெள்ளத்துரை முன்ஜாமின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பழனி மட நில மோசடி: வெள்ளத்துரை முன்ஜாமின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
நீட் போராட்டம்: மதுரையில் மாணவர்கள், பெண்கள் வலுக்கட்டாயமாக கைதால் பரபரப்பு !
நீட் போராட்டம்: மதுரையில் மாணவர்கள், பெண்கள் வலுக்கட்டாயமாக கைதால் பரபரப்பு !
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!
ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!
ராமேஸ்வரத்தில் ரூ.4.70 கோடியில் பிரம்மாண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வறை: பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு அடித்தளம்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
Embed widget