மேலும் அறிய

’’ஊரு ஒன்னுதான் ஆனா பேரு மூணு’’...! - இந்த ஊர்காரங்களுக்கு இப்படி ஒரு சோதனையா...!

’’நாங்கள் இது தொடர்பாக பலமுறை அரசுக்கு மனு அளித்துள்ளோம். இந்த ஊரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரும் அரசுக்கு 200க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்துள்ளார் இருந்தும் 36 ஆண்டுகளாக பலனில்லை’’

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட க. விலக்கு அருகில் திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ’’அன்னை இந்திரா நகர் என்ற ஊர்’’ அமைந்துள்ளது. கடந்த 1970ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ் மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களை இங்கு மறுகுடி அமர்த்தியது தமிழ்நாடு அரசு. 


’’ஊரு ஒன்னுதான் ஆனா பேரு மூணு’’...! - இந்த ஊர்காரங்களுக்கு இப்படி ஒரு சோதனையா...!

அன்னை இந்திரா நகர் என்ற பெயர் தொடக்கத்தில் இருந்தே இருந்தாலும், சிலோன் காலனி, இலங்கை அகதிகள் முகாம் ஆகிய பெயர்களும் அரசு ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரே ஊருக்கு மூன்று வெவ்வேறு பெயர்கள் இருப்பதால், பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

அரசு சார்பில் ஊராட்சி தொடர்பான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் போது சிலோன் காலனி என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மின் இணைப்பு உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்திலும் அன்னை இந்திரா நகர் என்றே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வேறு அரசு சார்ந்த ஏதேனும் ஒரு பணியை மேற்கொள்ளும்போது ஊர் பெயர் மாற்றம் உள்ளதால், பல சலுகைகளும் பல திட்டங்களை பெற முடியாமலும் தவித்து வருவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

 

’’ஊரு ஒன்னுதான் ஆனா பேரு மூணு’’...! - இந்த ஊர்காரங்களுக்கு இப்படி ஒரு சோதனையா...!

அதே நேரத்தில் இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மட்டும் இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரில் ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் தாயகம் திரும்பியோர் என்று அழைக்கப்படும் நிலையில்,  பள்ளியின் முகவரி மற்றும் பள்ளி தொடர்பான ஆவணங்களில் மட்டும் இலங்கை அகதிகள் முகாம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மேல் படிப்பு படிப்பதற்கும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்கு செல்லும்போதும், தாங்கள் அகதிகள் என நினைத்து பல்வேறு இடங்களில்  ஒதுக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் அப்பகுதி பள்ளி மாணவ மாணவிகள்.

இதனால்  தாங்கள் அகதிகள் இல்லை என்ற சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலகத்தை நோக்கி அலையும் நிலைமை உள்ளதாக கூறுகின்றனர். கடந்த 1985ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்ட போது இலங்கை அகதிகள் முகாம் என்று குறிப்பிடப்பட்டது.  அப்போது இருந்தே இந்த பிழையை திருத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுமார் 36 ஆண்டுகளாக அரசுக்கு மனு அனுப்பியும் பெயரை திருத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

’’ஊரு ஒன்னுதான் ஆனா பேரு மூணு’’...! - இந்த ஊர்காரங்களுக்கு இப்படி ஒரு சோதனையா...!

இது குறித்து இப்பகுதி ஊர் மக்கள் சிலர் கூறுகையில், " நாங்கள் இது தொடர்பாக பலமுறை அரசுக்கு மனு அளித்துள்ளோம். இந்த ஊரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரும் அரசுக்கு 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்துள்ளார்.  பள்ளிக்கூடம் தொடங்கும் போது அகதிகள் முகாம் என்று பிழையாய் குறிப்பிடப்பட்டது. இதைத் திருத்த வேண்டும் என்று கல்வித்துறை அலுவலர்கள்,  மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 200க்கும் மேற்பட்ட மனு அளித்து உள்ளோம்.  பலமுறை இந்த மனுக்கள் சென்னை தலைமை அலுவலகங்கள் வரை சென்றும் மேல் நடவடிக்கை இன்றி உள்ளது. பள்ளி ஆவணத்தில் இருக்கும் அகதிகள் முகாம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அன்னை இந்திரா நகர் என்ற முகவரியில் தொடர்ந்தால் இனிவரும் காலங்களிலாவது இந்தப் பள்ளியில் படித்து வெளியேறும் மாணவிகளுக்கு தேவையற்ற அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படாது. எனவே இந்த அரசு இந்தப் பிரச்சினையில் தனி கவனம் செலுத்த வேண்டும்"  என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Embed widget