மேலும் அறிய

கருட பஞ்சமி, ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

கருட பஞ்சமி மற்றும் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் வழிபாடு  நடைபெற்றது.

தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாருக்கு 10008 திருமாங்கல்ய சரடுகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பத்தாயிரத்தி எட்டு  அர்ச்சனை மந்திர வழிபாடு  செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்திருந்து பூஜையில் பங்கேற்றனர்.


கருட பஞ்சமி, ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில்.போடிநாயக்கனூர் ஜமீன்தாரர்களால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலைத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவிலில் இன்று கருட பஞ்சமியை முன்னிட்டும், ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு தனிச் சன்னதிகளில் வீற்றிருக்கும் கருடாழ்வார் மற்றும் பத்மாவதி தயாரித்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.


கருட பஞ்சமி, ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

கருட பஞ்சமியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தனி சன்னதியில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாருக்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு 10008 திருமாங்கல்ய சரடுகளால் புடவை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.பத்தாயிரத்து எட்டு மந்திர வழிபாடுகள் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்திருந்து வழிபாட்டில் பங்கேற்றனர். பத்தாயிரத்தி எட்டு  திருமாங்கல்யசரடுகளை பத்மாவதி தாயாருக்கு உடையாக உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை   பக்தர்கள் பத்தி பரவசத்துடன் தரிசித்து சென்றனர்.


கருட பஞ்சமி, ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

இதேபோல் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதி மற்றும் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு போடிநாயக்கனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அஷ்ட சித்தி வராகி அம்மன் கோவிலில் அமைந்துள்ள எட்டு வாராகி அம்மன் விக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று விசேஷ வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் வாராகி அம்மனை தரிசனம் செய்தனர். பெண் பக்தர்கள் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.


கருட பஞ்சமி, ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

 போடிநாயக்கனூர் திருமலாபுரம் அஷ்ட சித்தி வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வாராகி அம்மனின் எட்டு அவதாரங்களை சிறப்பிக்கும் வகையில் எட்டு வாராகி அம்மன் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வாராகி அம்மனுக்கு மிகுந்த சிறப்பு தினமான ஆடி மாத வளர்பிறை  பஞ்சமி திதியை முன்னிட்டு அஷ்ட சித்தி வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றது. பெண் பக்தர்கள் கோவிலில் உள்ள அம்மிக் குழவியில் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget