மேலும் அறிய

தேனியில் நெகிழ வைத்த ஆட்டோ ஓட்டுநர் - பயணி தவற விட்ட  பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

தேனி நகரில் ஆட்டோவில் சவாரி செய்த பயணி கொண்டு வந்த  பணத்தை ஆட்டோவிலேயே மறந்து சென்ற நிலையில் பயணியின் வீட்டிற்கே சென்று பணத்தை திரும்ப ஒப்படைத்து உள்ளார் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக்.

தேனி நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டோ ஓட்டும் தொழில் பார்த்து வருகிறார் தேனியைச் சேர்ந்த 36 வயதாகும் கார்த்திக். இவர் நேற்று வழக்கம்போல் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு சென்றுள்ளார். தேனி நகருக்கு அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் இரு பயணிகள் ஆட்டோவிற்கு காத்திருந்ததைப் பார்த்து அவர்களை சவாரிக்கு ஏற்றி உள்ளார் கார்த்திக். ஆட்டோவில் ஏறிய 78 வயதுடைய  ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன் இருவரும் பழனிசெட்டிபட்டியில் இருந்து தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டுமென ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக்கிடம் தெரிவித்து உள்ளனர்.

தேனியில் நெகிழ வைத்த ஆட்டோ ஓட்டுநர் - பயணி தவற விட்ட  பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

அதன்படி ஆட்டோ ஓட்டுநரும் பழனிசெட்டிபட்டியில் இருந்து, தேனி பழைய பேருந்து நிலையம் வரை சென்று ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணனை இறக்கி விட்டு வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் இவரது ஆட்டோவில் ஏறும் பயணிகளிடம் சகஜமாக பழகும் வழக்கம் உடையவராக இருந்துள்ளார். தனது ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு இவருடைய விசிட்டிங் கார்டை கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி இந்த பயணிகளுக்கும் இவரது விசிட்டிங் கார்டை கொடுத்து உள்ளார். 

தேனியில் நெகிழ வைத்த ஆட்டோ ஓட்டுநர் - பயணி தவற விட்ட  பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

பின் வழக்கம் போல் அடுத்த சவாரியை எதிர்பார்த்து ஆட்டோ நிலையம்  சென்றுள்ளார் ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக். பின் ஒரு மணி நேரம் கழித்து இவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்பில்,  நான் உங்கள் ஆட்டோவில் ஏறி பழனிசெட்டிபட்டிலிருந்து தேனி பழைய பேருந்து நிலையம் வரை சவாரி செய்தேன். என்னுடைய பையை  ஆட்டோவிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

அந்தப் பையில் ஆயிரக்கணக்கில் ரொக்கப் பணமும் அவருடைய வீட்டு சாவியும் இருந்ததாக கூறியுள்ளார். அந்த பையை கவனித்த ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் பத்திரமாக உள்ளது நானே நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து உங்கள் பணத்தை தருகிறேன் என்று அவர் இருக்கும் முகவரியை வாங்கி, அங்கு நேரடியாக சென்று பையையும் அதில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பத்திரமாக ஒப்படைத்துள்ளார். 

தேனியில் நெகிழ வைத்த ஆட்டோ ஓட்டுநர் - பயணி தவற விட்ட  பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

பணத்தைப் பெற்றுக்கொண்ட ராஜேந்திரன் ஆட்டோ ஓட்டுநரை பாராட்டி, அவருக்கு 100 ரூபாய் சன்மானமும் வழங்கியுள்ளார். அதனை வாங்க மறுத்து, எனது கடமையை செய்துள்ளேன் என்றுள்ளார் ஆட்டோ ஓட்டுனர்.  இது குறித்து பணத்தை தவறவிட்ட ராஜேந்திரன் கூறுகையில், நான் தேவதானப்பட்டியை சேர்ந்தவன். சொந்த விஷயமாக தேனி பழனி செட்டிப்பட்டிக்கு வந்தேன்.

வேலை முடிந்து திரும்ப வீட்டிற்கு செல்லும்போது பழனிசெட்டிபட்டியில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் நானும் எனது அண்ணனும் சென்றோம். ஆட்டோவிலிருந்து இறங்கிய பின்னரே கையில் கொண்டு வந்த பையை மறந்து ஆட்டோவில் வைத்து விட்டேன் என்பது எனக்கு நினைவுக்கு வந்தது.  உடனே ஆட்டோ ஓட்டுனருக்கு பை ஆட்டோவில் உள்ளது என்ற  தகவல் தெரிவித்தேன். அந்த பணத்தை ஆட்டோ ஓட்டுனர்  பத்திரமாக என்னிடம் ஒப்படைத்தார். அந்த பையிலிருந்த செல்போன் பணம் வீட்டு சாவி என அனைத்தும் பத்திரமாக எனக்கு திரும்ப கிடைத்தது" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget