மேலும் அறிய

கொட்டும் பருவமழையால் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி அருவி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் பருவ மழை பெய்ததால் இன்று அதிகாலை முதலே அருவியில் அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


கொட்டும் பருவமழையால் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு

இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று முதல் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதேபோல போடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும் பலத்த மழையின் காரணமாக தொடர்ந்து 10 நாட்களாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  நேற்று மாலைமுதல் விடிய , விடிய பெய்த கனமழையின் காரணமாக அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கெட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கொட்டும் பருவமழையால் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு

இதேபோல் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நண்பகல் வேளையில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக அருவியல் குளித்த அனைவரையும் வனத்துறையினர் வெளியேற்றினர். பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான சோத்துப்பாறை  அணை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி, , செழும்பாறு வனப்பகுதி, உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் நள்ளிரவு வரை  கனமழை பெய்ததோடு  இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது.


கொட்டும் பருவமழையால் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு

இந்த கனமழையால்  கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பு ஆறு உள்ளிட்ட ஆறுகளில் காற்றாட்டு வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் அனைத்தும் ஒன்றிணைந்து செல்வதால் பெரியகுளம் வராக நதி ஆற்றில் பெரும் வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கொட்டும் பருவமழையால் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு

இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மேலும் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் நீரின் அளவு சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Madras HC CJ: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - யார் இந்த ஸ்ரீவஸ்தவா? SC-க்கு 3 புதிய நீதிபதிகள்
Madras HC CJ: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - யார் இந்த ஸ்ரீவஸ்தவா? SC-க்கு 3 புதிய நீதிபதிகள்
Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
RCB Vs LSG: கடைசி லீக் போட்டி, முதல் இடத்தை பிடிக்குமா ஆர்சிபி? மும்பையை தலையில் தட்டி ஓரம் கட்டிய பஞ்சாப்
RCB Vs LSG: கடைசி லீக் போட்டி, முதல் இடத்தை பிடிக்குமா ஆர்சிபி? மும்பையை தலையில் தட்டி ஓரம் கட்டிய பஞ்சாப்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aartiஓய்வை அறிவித்த தோனி?” ஒவ்வொரு வருஷமும் சவால்..” குழப்பத்தில் ரசிகர்கள் | MS Dhoni Retirementதமிழ்நாட்டில் பவன் போட்டி? அதிமுக கூட்டணியில் ஜனசேனா! பாஜக பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madras HC CJ: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - யார் இந்த ஸ்ரீவஸ்தவா? SC-க்கு 3 புதிய நீதிபதிகள்
Madras HC CJ: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - யார் இந்த ஸ்ரீவஸ்தவா? SC-க்கு 3 புதிய நீதிபதிகள்
Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Rajyasabha MP Election: புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்? தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? திமுகவிற்கு 4, அன்புமணிக்கு ஆப்பு?
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
RCB Vs LSG: கடைசி லீக் போட்டி, முதல் இடத்தை பிடிக்குமா ஆர்சிபி? மும்பையை தலையில் தட்டி ஓரம் கட்டிய பஞ்சாப்
RCB Vs LSG: கடைசி லீக் போட்டி, முதல் இடத்தை பிடிக்குமா ஆர்சிபி? மும்பையை தலையில் தட்டி ஓரம் கட்டிய பஞ்சாப்
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
PBKS vs MI: பல்தான்சை பஞ்சராக்கிய பஞ்சாப்.. கெத்தா குவாலிஃபயருக்குச் சென்ற ஸ்ரேயாஸ் பாய்ஸ்! எலிமினேட்டரில் மும்பை!
Annamalai Vs Nainar: அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு - அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?
IPL MI Vs PBKS: 185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
185 ரன்கள் வெற்றி இலக்கு; மும்பையை வீழ்த்தி முதலிடம் பிடிக்குமா பஞ்சாப்.?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
சென்னையிலே மிகவும் ஆபத்தான சாலை எது தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை விபத்துகளா?
Embed widget