மேலும் அறிய

ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசிய உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் மற்றும் மாணவர்களை போராட தூண்டிய காரணத்திற்காக  வணிகவியல் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் தாவரவியல் ஆசிரியர் வெற்றி உட்பட மூன்று பேரை முதன்மைக் கல்வி அலுவலர் இந்திராணி  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 343 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இவர்களுக்கு பாடம் எடுக்க தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் குமார் உள்ளிட்ட 27 ஆசிரியர்கள் உள்ளனர் . இந்த நிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் என்பவர் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் மாணவிகளிடம் மாதவிடாய் பிரச்சனை குறித்து பேசுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தங்களது பெற்றோர்களுடன் கடந்த 13 ஆம் தேதி  பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை அழைத்து அவரை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர். மேலும், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு வர வேண்டுமென வலியுறுத்தி ஆண்டிப்பட்டி  ரெங்கசமுத்திரம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் இங்கு வந்த உடற்கல்வி ஆசிரியரிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு தாக்கும் தொணியில் பேசினர். தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து கொட்டிய மழையிலும் நனைந்து கொண்டு மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் உள்ளிட்டோரை அழைத்து அரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு தேனி புறப்பட்டு சென்றார்.


ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தேனி மாவட்ட கல்வி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மூன்று  ஆசிரியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவ, மாணவிகளின் புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதற்காகவும் வணிகவியல் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் தாவரவியல் ஆசிரியர் வெற்றி ஆகியோர் மாணவ மாணவிகளை போராட்டத்திற்கு தூண்டியதற்காகவும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தேனி மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி  உத்தரவு பிறப்பித்தார். மூன்று அரசு ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Embed widget