மேலும் அறிய

அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

தேனி மாவட்டத்தில் போடி மற்றும் சின்னமனூரில் குவாரி மற்றும் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சேர்ந்தவர் மகேஷ் இவரது மனைவி பாரதி மகன் விஷால் (16) 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திக் (14) இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்துள்ளனர். தேனி அருகே வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் போடிக்கு சென்றுள்ளனர். நேற்று காலை போடி அருகே உள்ள குரங்கனி, கொட்டகுடி ஆகிய பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு வடக்கு மலைப்பகுதிகளில் கிராமத்தை அடுத்த கோம்பை ஆற்றில் குளித்தனர்.


அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் விஷால் நீர் சூழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு துறை வீரர்கள் நீர்ச்சுழலில் சிக்கிய விஷால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு சம்பவமாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நல்லுக்கொண்டு பாறை என்ற அரசால் கைவிடப்பட்ட கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே செயல்படாமல் உள்ளது.

இந்த கல் குவாரியில் உள்ள பள்ளத்தில் இருபது அடிக்கு மேலாக தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த கல் குவாரியில் வேப்பம்பட்டி மற்றும் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் அவ்வப்போது குளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காமாட்சிபுரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் லோகேஷ், கௌதம், மாதவன் ஆகிய மூன்று மாணவர்கள் கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளனர். தாழ்வான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.


அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்த மாணவர்கள்: ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!

இதனால் பதினான்கு வயதாகும் லோகேஷ் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு கௌதம் என்ற சிறுவன் காப்பாற்ற முற்பட்டு உள்ளார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்ற சென்ற சிறுவன் உட்பட இருவரும் 20 அடி ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதனை அறிந்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் உடலையும் மீட்டனர்.விபத்தில் உயிர் இழந்த சிறுவர்களின் உடல்களும், தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல் குவாரியில் இரு சிறுவர்கள் முழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமானது 138 புள்ளி 70 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு தற்போது 534 கன அடி நீரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget