![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சாலை விபத்தில் உயிரிழந்த ஐயப்பன் பக்தர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
குமுளி அருகே சபரிமலை சென்று திரும்பிய வாகனம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்பட்டது.
![சாலை விபத்தில் உயிரிழந்த ஐயப்பன் பக்தர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் Theni: In the accident of a vehicle returning from Sabari Hill, eight people died and the family of the deceased was given a relief fund of Rs 2 lakh each. சாலை விபத்தில் உயிரிழந்த ஐயப்பன் பக்தர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/adfd61db5f7637dbbaa7acd3d88809f71672027300539193_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேனி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் குமுளி மலைப்பாதையில் கடந்த 23-ந் தேதி 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்களான தேவதாஸ், சிவக்குமார், நாகராஜ், முனியாண்டி, கன்னிச்சாமி, வினோத், கலைச்செல்வன், கார் டிரைவர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ராஜா, அவருடைய 7 வயது மகன் ஹரிஹரன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குமுளியில் ஐயப்ப பக்தர்கள் வாகனம் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு
நேற்று முன்தினம் காயமடைந்தவர்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சந்தித்து நிதி உதவி வழங்கினார். இந்நிலையில் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி இறந்தவர்களின் இருப்பிடத்திற்கே சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், தமிழக அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்கினார். அப்போது இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கூறினார். அதேபோல் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)