மேலும் அறிய

இடைவிடாமல் பெய்த கனமழை; ஒரே நாளில் 6 அடி உயர்ந்த முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள  ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் கனமழைபெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணையில் ஒரே நாளில் 6 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.


இடைவிடாமல் பெய்த கனமழை; ஒரே நாளில் 6 அடி உயர்ந்த முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

முல்லை பெரியாறு அணை நிலவரம்

பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு அணைநீர்மட்டம் டிச. 12ம் தேதி காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.40 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 397.50 கனஅடியாகவும் இருந்தது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை திடீரென உயர்ந்த நீர்வரத்தால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6அடி உயர்ந்து 125.40 அடியானது. அணையின் நீர்இருப்பு 3,509 மில்லியன் கனஅடியாக இருந்தது. மழை தொடரும் பட்சத்திலும் நீர்மட்டம் மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.


இடைவிடாமல் பெய்த கனமழை; ஒரே நாளில் 6 அடி உயர்ந்த முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

வைகை அணை நிலவரம்

அதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி செல்லும் வழியில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் குடி நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து உள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 55.25 அடியாக உள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 10,347 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மொத்த நீர்த்தேக்க உயரம் 71 அடி; தற்போது 55.25 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.மேலும்அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்ட நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.


இடைவிடாமல் பெய்த கனமழை; ஒரே நாளில் 6 அடி உயர்ந்த முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

மஞ்சளார் அணை நீர் வரத்து

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல்  பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து  நேற்று காலை முதல் அதிகரித்து, அணையின் நீர்மட்டம்  52 அடியில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கி  இன்று காலை 8 மணி அளவில் அதன் முழு கொள்ளளவான 57 அடியில்  55 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீரை மஞ்சளார் ஆற்றில்  பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர்.

தற்பொழுது அணைக்கு நீர் வரத்து 672 கன அடியாக உள்ள நிலையில்  மஞ்சளார் ஆற்றில்  566 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதிகளான  தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலகுண்டு விருவீடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றங்கரை விவரங்கள்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு  ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


இடைவிடாமல் பெய்த கனமழை; ஒரே நாளில் 6 அடி உயர்ந்த முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மஞ்சளார்  ஆற்றில்  நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியாக உள்ள நிலையில்  மஞ்சளார் அணைக்கு வரும் நீர்வரத்து  672 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 566 கனஅடியாக திறக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் 4.2 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Free Coaching: இனி அரசுப்பணி ஈஸிதான்; போட்டித்தேர்வு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்- பங்கேற்பது எப்படி?
Free Coaching: இனி அரசுப்பணி ஈஸிதான்; போட்டித்தேர்வு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்- பங்கேற்பது எப்படி?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
Embed widget