மேலும் அறிய

மனைவியை திருப்புலியால் குத்தி சுத்தியால் அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

’’மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஒரு ஆயுள் தண்டனை 5,000 ரூபாய் அபராதம் விதிப்பு’’

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்ற முத்துக்கண்ணன் (49). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அங்காளஈஸ்வரி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துக்கண்ணன் குடிபோதையில் வந்து அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்காளஈஸ்வரி தனது கணவரை பிரிந்து, அதே ஊரில் உள்ள தனது தம்பி சங்கிலி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.  இந்தநிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சங்கிலியின் வீட்டுக்கு முத்துக்கண்ணன் சென்றார். தனது மனைவி பிரிந்து சென்றதை மனதில் வைத்துக் கொண்டு அவர் சங்கிலியிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

மனைவியை திருப்புலியால் குத்தி சுத்தியால் அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
 
இதுகுறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் சங்கிலி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முத்துக்கண்ணன், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி தனது மனைவியை தேடி சங்கிலியின் வீட்டுக்கு சென்றார். அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்காளஈஸ்வரியுடன் தகராறு செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்து இருந்த திருப்புளியால் அங்காளஈஸ்வரியை குத்தினார். பின்னர் சுத்தியலால் அவரை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அதை தடுக்க வந்த சங்கிலியையும் தாக்கிவிட்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

மனைவியை திருப்புலியால் குத்தி சுத்தியால் அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
 
படுகாயம் அடைந்த அங்காளஈஸ்வரியை அவருடைய உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இந்த கொலை குறித்து சங்கிலி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த முத்துக்கண்ணனை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர்  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார்.

மனைவியை திருப்புலியால் குத்தி சுத்தியால் அடித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
 
மனைவியை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  மேலும், கொலை செய்யும் நோக்கில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், சங்கிலியை தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து முத்துக்கண்ணனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Summit PM Modi: “இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
“இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
IPL 2025 MI vs GT:  குஜராத் நடத்திய பவுலிங் அட்டாக்.. தட்டுத்தடுமாறி 155 ரன்களை எட்டிய மும்பை! டேபிள் டாப் யாரு?
IPL 2025 MI vs GT: குஜராத் நடத்திய பவுலிங் அட்டாக்.. தட்டுத்தடுமாறி 155 ரன்களை எட்டிய மும்பை! டேபிள் டாப் யாரு?
IPL 2025 MI vs GT: நீங்கதான்யா ஃபீல்டரு.. 3 கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்! சுப்மன்கில் அப்செட்
IPL 2025 MI vs GT: நீங்கதான்யா ஃபீல்டரு.. 3 கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்! சுப்மன்கில் அப்செட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்Rahul Gandhi meet PM Modi | இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்! மோடி - ராகுல் சந்திப்பு! பின்னணி என்ன?DMDK Issue: விஜயபிரபாகரனுக்கு பதவியா? தேமுதிகவில் வெடித்த கலகம்! சமாளிப்பாரா பிரேமலதா? | Premalatha

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Summit PM Modi: “இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
“இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
ABP Summit PM Modi: முதலில் தேசம்தான்! இதுதான் ஒரே வழி...பிரதமர் மோடி அதிரடி பேச்சு!
IPL 2025 MI vs GT:  குஜராத் நடத்திய பவுலிங் அட்டாக்.. தட்டுத்தடுமாறி 155 ரன்களை எட்டிய மும்பை! டேபிள் டாப் யாரு?
IPL 2025 MI vs GT: குஜராத் நடத்திய பவுலிங் அட்டாக்.. தட்டுத்தடுமாறி 155 ரன்களை எட்டிய மும்பை! டேபிள் டாப் யாரு?
IPL 2025 MI vs GT: நீங்கதான்யா ஃபீல்டரு.. 3 கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்! சுப்மன்கில் அப்செட்
IPL 2025 MI vs GT: நீங்கதான்யா ஃபீல்டரு.. 3 கேட்ச்களை கோட்டை விட்ட குஜராத்! சுப்மன்கில் அப்செட்
முதல் குடியரசுத் தலைவர்...சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் திரௌபதி முர்மு
முதல் குடியரசுத் தலைவர்...சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் திரௌபதி முர்மு
"கோலி உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய ஆசை" நம்ம கம்பீரா இது.. ஒரே ஃபன்
இப்படி ஒரு திட்டமா...? கடலூருக்கு அடித்தது அதிர்ஷ்டம் - என்ன திட்டம் தெரியுமா ?
இப்படி ஒரு திட்டமா...? கடலூருக்கு அடித்தது அதிர்ஷ்டம் - என்ன திட்டம் தெரியுமா ?
EPS : “முதல்வர் மு.க.ஸ்டாலின் எனும் Dictator” EPS சரமாரி விமர்சனம்..!
“முதல்வர் மு.க.ஸ்டாலின் எனும் Dictator” EPS சரமாரி விமர்சனம்..!
Embed widget