மேலும் அறிய

தேனி : தாய், மனைவியிடம் தகராறு செய்தவரை எதிர்த்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கைது!

போடியில் தாய், மனைவியிடம் தகராறு செய்த தம்பதியை மிரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் போடி வ.உ.சி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். அவருடைய மகன் முருகன் (36). இவர், இந்திய ராணுவத்தின் மேற்கு வங்காள படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வருகிறார்.  தற்போது இவர், 1½ மாத விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். போடி சர்ச் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (55). சாலைப்பணியாளராக உள்ளார். அவருடைய மகன் தீனதயாளன் (26). இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முருகனின் மனைவி சரவணபிரியாவை (26) கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணபிரியா, தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராணுவத்தில் இருந்தவாறே அப்போதைய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வியிடம் முருகன் புகார் செய்தார். 


தேனி : தாய், மனைவியிடம் தகராறு செய்தவரை எதிர்த்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கைது!

அதன்பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்தனர். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகனின் தாய் முத்துலட்சுமி, மனைவி சரவணபிரியா ஆகியோர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மணிவண்ணன், அவருடைய மனைவி ஞான ஒளி (45) ஆகியோர் 2 பேரையும் வழி மறித்தனர். பின்னர் மணிவண்ணன், எனது மகன் சிறை சென்றதற்கு நீங்கள் தான் காரணம். இதனால் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் சும்மா விட மாட்டேன் என்று அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் 2 பேரையும் அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. 

தேனி : தாய், மனைவியிடம் தகராறு செய்தவரை எதிர்த்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கைது!
 
இதுகுறித்து முத்துலட்சுமி, முருகனுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர், தனது கையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். மேலும் மணிவண்ணனை சுட்டு தொலைத்து விடுவேன் என மிரட்டினார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போடி நகர் காவல் நிலையத்தில் மணிவண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து முருகனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

தேனி : தாய், மனைவியிடம் தகராறு செய்தவரை எதிர்த்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கைது!
 
பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே சரவணபிரியா போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரில், பெண்களை வன்கொடுமை செய்தல் மற்றும் கொலைமிரட்டல் விடுத்ததாக மணிவண்ணன், ஞான ஒளி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான முருகன், விடுமுறை முடிந்து நேற்று மேற்கு வங்காள ராணுவ முகாமுக்கு செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது‌. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget