மேலும் அறிய

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்

’’கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுருளி அருவியில் குளிக்க பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்’’

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற  நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுருளி அருவி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கிய இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது, ஆனால் சுருளி அருவி தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்
வார விடுமுறை நாட்கள், கோவில் விஷேச நாட்களில் வனப்பகுதிக்குள்ளும் சுருளி அருவிக்கும் பக்தர்கள் செல்லாமல், சுருளி ஆற்றின் கரையில் திதி, தர்ப்பணம் செய்ய சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுருளி அருவிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை பெரியாற்றில் குளிக்க செல்கின்றனர்.

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், “சுருளி அருவிக்கு முன்னோர்களுக்கு திதி ,தர்பணம் செய்ய வெளி ஊர்களில் இருந்து வருகிறோம். அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில் முல்லை பெரியாற்று கரையோரங்களில் ஈமச்சடங்குகளை செய்து திரும்புவதாக கூறுகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு அருவிக்கு வரும்பொழுது அருவிக்கு செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கொடைக்கானல் பகுதியில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவிக்கு மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருவதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுருளி அருவியில் குளிக்க பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர். 

தேனி: சுருளி அருவியில் குளிக்க ஓரிரு வாரங்களில் அனுமதி? - வனத்துறை அதிகாரிகள் தகவல்

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “சுருளி அருவியில் விரைவில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்க உள்ளோம். அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் இது நடக்கும்” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
Embed widget