மேலும் அறிய

ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம், தென்காசியில் அனுசரிக்கப்பட்டது !

தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் நெல் கட்டும் செவல் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில்  பிறந்தவர், முதல் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன். இவர் தான் 1755-ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் ஆவார். 1767 ம் ஆண்டு ஆங்கிலேயருடன் நடந்த போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார் என வரலாறு கூறுகிறது. மேலும் 2000 ம் ஆண்டு தமிழ் நாடு அரசிடம் ஒண்டி வீரரின் வாரிசுதாரர்கள் மாவீரன் ஒண்டி வீரரின் நினைவாக நினைவு மண்டபம் கட்டவேன்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதன் பலனாக பாளையங்கோட்டையில் ரூபாய் 50 இலட்சம் செலவில் ஒண்டிவீரன் மணிமண்டபம் அப்போதைய தமிழ்நாடு முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் 1 மார்ச் 2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.
 

ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம், தென்காசியில் அனுசரிக்கப்பட்டது !
 
இவரது நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அப்போது பச்சேரியில் உள்ள நினைவு தூண் மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள நினைவு மணி மண்டபத்தில் மாவீரர் ஒண்டி வீரரின் வாரிசுதாரர்கள், பல வேறு மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததாலும், தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாலும் இந்நிகழ்விற்கு தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் வெளி மாவட்ட பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம், தென்காசியில் அனுசரிக்கப்பட்டது !
 
அதே போல் இந்த ஆண்டும் கொரானோ பெருந்தொற்று காரணமாக நினைவு தின நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று பச்சேரி கிராமத்தில் உள்ள மாவீரர் ஒண்டி வீரரின் நினைவு தூணுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் இந்த விழாவிற்கு அதிமுகவின் முன்னாள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜ லெட்சுமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி மற்றும் தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என திரளானோர் கலந்து கொண்டு மாவீரர் ஒண்டி வீரரின் நினைவு துணிற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினம், தென்காசியில் அனுசரிக்கப்பட்டது !
ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் பாதுகாப்பு பணிக்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் தலைமையில் 4 மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்கள், 10 மாவட்ட துணை காவல் துறை கண்காணிப்பாளர்கள், 36 காவல் துறை ஆய்வாளர்கள் உட்பட 1242 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget