மேலும் அறிய

மாறும் தென்மாவட்ட ரயில்நிலையங்கள்.. இதில் மதுரைக்கு மட்டும் ரூ.347 கோடி, ஆஹா அசத்தல் அப்டேட் !

மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347.47 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை கோட்ட ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் இன்று ஆய்வு செய்தார்.

ரயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற இருக்கிறது. 
 
மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே  பொது மேலாளர் ஆர். என். சிங் செய்தார். திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் போன்ற ரயில் நிலையங்களில் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் புதன்கிழமை அன்று ஆய்வு செய்கிறார். பின்பு திருநெல்வேலி - திருச்சி இடையே சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வில்  கட்டுமான பிரிவு முதன்மை நிர்வாக அதிகாரி சுசில் குமார் மவுரியா, முதன்மை பொறியாளர் சஞ்சய் பிரசாத் சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இறுதியாக திருநெல்வேலி ரயில் நிலைய ஆறாவது நடைமேடை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்வார். பிறகு திருநெல்வேலியில் இருந்து திருச்சி வரை ஆய்வும், ரயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற இருக்கிறது. 
 
திருநெல்வேலி: 
 
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரூபாய் 92.8 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிழக்கு மேற்கு பகுதி ரயில் முனைய கட்டிடங்கள், 12 மீட்டர் அகல ரயில் பாதை மேற்புறப் பகுதி பயணிகள் காத்திருப்பு வளாகம், எஸ்கலேட்டர்கள், லிஃப்ட்கள், மேம்பால நடைப்படிகள்,  வெளி வளாக மேம்பாடு, நடைமேடை மேம்பாடு ஆகிய பணிகள் அடங்கும். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்களை தாமதமின்றி இயக்க கூடுதலாக ஆறாவது நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 60% பணிகள் நிறைவு பெற்று அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. 
 
விருதுநகர்:
 
விருதுநகர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய் 30.55 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தோரண நுழைவுவாயில், சுற்றுச்சுவர், வெளிவளாக மேம்பாடு, மேற்கூறையுடன் கூடிய நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகன காப்பகங்கள், ரயில் நிலைய கட்டட முகப்பு மேம்பாடு, ரயில் இயக்க துணை சேவை அலுவலகங்கள் இடமாற்றம், ஒருங்கிணைந்த விசாரணை மையம் அமைக்கும் பணி ஆகியவை அடங்கும். மேலும் பயணிகள் காத்திருப்பு பகுதி மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் கூடிய ஆறு மீட்டர் அகல நடை மேம்பாலப் பணிகள்,  மேற்கூரை நீட்டிப்புப் பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 94 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதியில் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.
 
மதுரை:
 
மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347.47 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிழக்கு மேற்கு பகுதி ரயில் முனைய கட்டடங்கள், 42 மீட்டர் அகல ரயில் பாதை மேற்புறப் பகுதி பயணிகள் காத்திருப்பு வளாகம், நடை மேம்பால மேம்பாட்டு பணிகள், பார்சல் போக்குவரத்திற்கு புதிய தனி நடை மேம்பாலம் அமைப்பது, புதிய விசாலமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகங்கள், மேற்கூறையுடன் கூடிய பாதசாரிகள் நடைபாதை, ரயில் நிலையத்தை பெரியார் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளும் அடங்கும். ஏற்கனவே கிழக்கு நுழைவாயிலில் புதிய பல்லடுக்கு இருசக்கர வாகன காப்பகமும், மேற்கு நுழைவாயிலில் புதிய பல்லடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகமும் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் கிழக்கு நுழைவாயிலின் வடக்கு பகுதியில் ஒரு புதிய பல்லடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவு பெற்று பயணிகள் பயன்பாட்டிற்கு வரும்.
 
திண்டுக்கல்:
 
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய் 22.71 கோடி செலவில் மறு சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதிய ரயில் நிலைய கட்டிடம், பயணி சீட்டு பதிவு மையங்கள், ரயில் நிலைய கட்டிட முகப்பு மேம்பாடு, மேற்கூரை பணிகள் ஆகியவை அடங்கும். 
மேலும் தோரண நுழைவுவாயில்,  வெளிவளாக மேம்பாடு, மேற்கூறையுடன் கூடிய நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகன காப்பகங்கள், ரயில் நிலைய கட்டிட முகப்பு மேம்பாடு,  ஒருங்கிணைந்த விசாரணை மையம் அமைக்கும் பணி ஆகியவை அடங்கும். மேலும் பயணிகள் காத்திருப்பு பகுதி மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் கூடிய ஆறு மீட்டர் அகல நடை மேம்பாலப் பணிகள்,  மேற்கூரை நீட்டிப்புப் பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய வசதிகள் அடுத்த ஆண்டு மே மாதம் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget