மேலும் அறிய

”தொழிலதிபருக்கு மிரட்டல்” தேனியில் நடந்த சினிமா பாணி மிரட்டல்..!

தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  இறுதி விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டது.

தேனியில் சினிமா பாணியில் தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை. இவர்களில் ஐந்து பேருக்கு  மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு.

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் கடந்த 14.03.2023 அன்று ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் தனது மாமனார் ஆண்டராயர் அதிசயம் (68)என்பவரை ஒரு சிலர் கடத்தியதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஆண்டிபட்டி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கார் நிற்காமல் சென்றுள்ளது. காவல்துறையினர் அந்த காரை துரத்திச் சென்ற போது அந்தக் காரின் பின்பகுதியில் முதியவர் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணியை வைத்து மூடி ஒரு சிலர் கடத்திச் சென்றதை கண்டறிந்தனர்.


”தொழிலதிபருக்கு மிரட்டல்” தேனியில் நடந்த சினிமா பாணி மிரட்டல்..!

காவல்துறையினர் காரை விடாமல் துரத்திச் சென்று நிலையில், வைகை அணை அடுத்துள்ள குள்ளப்புரம் பகுதியில் அந்த முதியவரை காரில் இருந்து தள்ளி விட்டு காரில் இருந்தவர்கள் தப்பிச்சென்றனர். காவல் சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா முதியவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், இதுகுறித்த விபரங்களை காவல்துறையினருக்கு அனுப்பினார். பின்னர் காவல்துறையினர் சுற்றி வளைத்து காரை மடக்கிப் பிடித்து காரில் இருந்த ஆறு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம்  நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட நபர் காணாமல் போன ஆண்ட்ராயர் அதிசயம் என்று தெரியவந்தது.


”தொழிலதிபருக்கு மிரட்டல்” தேனியில் நடந்த சினிமா பாணி மிரட்டல்..!

மேலும் அவரது தோட்டத்தில் பணிபுரிந்த சங்கரலிங்கம் என்பவரும், அவரது நண்பரான புவனேஸ்வரன் என்பவரும் கொடுத்த தகவலின் படி, மதுரை மற்றும் தேனி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேர் ஆண்ட்ராயர் அதிசயத்தை கடத்தி அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சங்கரலிங்கத்தை கைது செய்ய சென்றபோது அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  இறுதி விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டது.


”தொழிலதிபருக்கு மிரட்டல்” தேனியில் நடந்த சினிமா பாணி மிரட்டல்..!

இதில் திருப்பதி,பிரபு,சுந்தர், கௌசிகன்,கருப்பசாமி (எ) அஜித், புவனேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 364ன் கீழ் ஆயுள் தண்டனைமற்றும் ரூபாய் ஆயிரம் அபராதமும்,1 முதல் ஐந்து வரை உள்ள குற்றவாளிகளுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 342 ன் கீழ் ஓராண்டு மெய்க்காவல் தண்டனை மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 304 ன் படி மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் அனைவரும் சிறையில் இருந்த காலம் போக மீதமுள்ள தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget