மேலும் அறிய
சிவகாசி பட்டாசு ஆலைகள் வெடி விபத்து சம்பந்தமாக குழு அமைக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா பேட்டி !
மது விலக்கு குறித்து முதல் கையெழுத்திட்டவர் தலைவர் விஜய் அண்ணா முக்கியமான பாதைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

அமைச்சர் கீர்த்தனா
Source : whatsapp
சிவகாசி பட்டாசு ஆலைகள் வெடி விபத்து சம்பந்தமாக குழு அமைக்கப்படும் - இன்று வரை இது போல் யாரும் குழு அமைத்ததில்லை மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கீர்த்தனா பேட்டி.
அமைச்சர் கீர்த்தனா
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக தொகுதிக்கு செல்வதற்காக இன்று சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த அமைச்சர் கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது...," சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ என்று சொல்கிறார்கள் அதைவிட சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்கி, அண்ணாவுக்கு கொடுக்க வேண்டும் என்று தான் என்னுடைய ஆசை. இதுவரை சிவகாசியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. கடைசி ஐந்து வருடமாக அது செயல்படவே இல்லை நாங்கள் தான் அதை திறந்தோம் 24 மணி நேரம் மக்களுக்காக அது செயல்படும்.
பதவி ஏற்பு விழாவில் சான்றிதழ் எடுத்து செல்ல மறந்தது குறித்த கேள்விக்கு:
யார் யாரோ என்னென்னமோ சொல்கிறார்கள் கையில் தான் இருந்தது. அவங்க வெயிட் பண்ணி இருந்தால் நமக்கு கைக்கு வந்திருக்கும். மறதி என்று சொல்கிறார்கள் அதை தவிர்த்து இருக்கலாம்.
சிவகாசியில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்படுவது குறித்த கேள்விக்கு: இதற்காக குழு அமைக்கப்படும் என வாக்குறுதியிலே சொல்லியிருந்தேன் அதற்கான வேலைகள் நடைபெறும். கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிக நிதி கொடுக்கப்படுவது குறித்த கேள்விக்கு இந்த கேள்வியை கடந்த ஆட்சியில் நீங்கள் கேட்டிருக்க வேண்டும் நாங்கள் செய்யாத போது இந்த கேள்வியை நீங்கள் கேட்கலாம். பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு சம்பந்தமாக குழு அமைக்க உள்ளம் இன்று வரை இதுபோல் யாரும் அமைக்கவில்லை. கடந்த வெடி விபத்தில் கூட பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தோம் பிணவரை சென்று வெடிக்கான விபத்து குறித்து ஆராய்ந்தோம் அவர்களுக்கான நீதி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசிப்போம்.
பூரண மதுவிலக்கு குறித்த கேள்விக்கு: மது விலக்கு குறித்து முதல் கையெழுத்திட்டவர் தலைவர் விஜய் அண்ணா முக்கியமான பாதைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இனிமேல் எந்த மாதிரி நடவடிக்கை இருக்கும் என உங்களுக்கே தெரியும் இதற்கான பதில் நான் சொல்ல வேண்டிய தேவையில்லை என்றார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















