40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
திருவள்ளூரில் பணி முடித்து வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரால் அதிர்ச்சி

திருவள்ளூர்: பொன்னேரி அருகே பணி முடித்து வீட்டுக்கு நடந்து சென்ற 40 வயது பெண்ணை இளைஞர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவதாக கூறி, பாதி வழியில் கத்தியை காட்டி பாலியல் அத்துமீறல் ஈடுபட்டார். உடலில் காயங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பணி முடிந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நேற்று இரவு பணி முடித்து விட்டு 9 மணி அளவில் ஆமூர் ஏரிக்கரை சாலையில் நடந்து சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று விடுவதாக இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். அந்த வழிய செல்லும் இளைஞர் தானே என்று அப்பெண் இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு சென்றபோது, ஏரிக்கரை கோவில் அருகே திடீரென இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி கத்தியை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இருள் சூழ்ந்த பகுதி என்பதால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவை தாண்டி தான் பெண்ணின் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே, அவரை அந்த இளைஞர் காது உள்ளிட்ட பகுதிகளில் கடித்து கையில் கிடைத்த கட்டையால் முதுகில் அடித்து கத்தியைக் காட்டி துன்புறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது
அப்பெண் கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அங்கும் இங்கும் ஓடிய நிலையில் அப்போது அவ்வழியே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தை கண்ட அந்த இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடு உள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அப்பெண்ணை மீட்டு காவல் துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கச் சொல்லி வழக்கு பதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சைனவரம் பகுதியில் இருந்து அமுருக்கு செல்வதற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏரிக்கரை ஒட்டி சாலை செல்வதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதாலும் இதுபோன்று அசம்பாவிதங்கள் அப்பகுதியில் செல்லும் பெண்களுக்கு அடிக்கடி நடைபெறுவதாகவும் இதுபோன்று இனி எந்த பெண்ணுக்கும் நடைபெறக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
மேலும், சைனாவரம், மாதவரம், தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் அந்த கிராமத்திற்கு செல்ல மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து செல்லும் நிலை இருப்பதால் இதை பயன்படுத்தி ஒரு சில நபர்கள் இதுபோன்று பாலியல் அத்துமீறல்கள் ஈடுபடுவதாகவும் இப்பகுதியில் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் இப்பகுதியில் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















