சிவகங்கையில் நாளை (02.08.2025) மின்தடை உங்க ஏரியா இருக்கா? செக் பண்ணுங்க!
Sivagangai Power Shutdown 02.08.2025: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில், நாளை பல்வேறு பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Sivagangai Power Shutdown: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் பல்வேறு பகுதிகளில் நாளை (02.08.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
Sivagangai Power Shutdown - மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. சிவகங்கை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் விநியோகம் நிறுத்தம் பகுதிகள்
மானாமதுரை, சிப்காட், இராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதியில் காலை 10.00மணி முதல் மதியம் 02.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.





















