மேலும் அறிய

சிவகங்கை: கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 9ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு

வழக்கறிஞர் மோகன்குமார் முன்னிலையில் 2019ல் நடைபெற்ற கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான,மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும், அதை வீடியோ பதிவு செய்யவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டேன். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளரை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தேன். திடீரென, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்த அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி அதிமுக வேட்பாளர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இதனால், மறுவாக்கு எண்ணிக்கை கோரிய எனது மனு தேர்தல் தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே, எனது கோரிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஆனந்தி, வழக்கறிஞர் மோகன் குமார் வழக்கறிஞராக கமிஷனராக நீயமிக்கப்படுகிறார். அவர் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். இதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 11ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

 


அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னயத்துடன் இருப்பது அவசியம்- மதுரை கிளை

தேனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆரிப் ரகுமான் என்பவரை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ததை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், உத்தரவில்,"இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளரின் விசாரணை அறிக்கையில், ஆரிப் ரகுமான் மீது பதியப்பட்ட வழக்குகளில் பல வழக்குகள், தவறுதலாக பதியப்பட்டவை என்றும், சில வழக்குகள் முன்விரோதம் காரணமாக பதியப்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொதுவாக அரசு வழக்கறிஞர் நியமனத்தின் போது அவர்களின் நடத்தை, தகுதி, கல்வித்தரம், அப்பதவிக்கு பொருத்தமானவரா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னயத்துடன் இருப்பது அவசியம். ஆகவே அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்களின் அனுபவம், நடத்தை, ஒழுக்கம், தகுதி போன்றவை குறித்து முறையாக விசாரிக்கப்பட்ட பின்னரே பணியமர்த்த வேண்டும். ஆகவே பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக ஆரிப் ரகுமானை நியமித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salemVCK Alliance PMK | திருமாவுடன் பாமகவினர் சந்திப்பு உற்று நோக்கும் கட்சிகள் விஜய் மாஸ்டர் ப்ளான்Sengottaiyan vs EPS : OPS-வுடன்  ரகசிய சந்திப்பு!அடித்து ஆடும் செங்கோட்டையன்!மரண பீதியில் எடப்பாடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
Minister Ponmudi : மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க நினைக்கிறது ; பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி!
Minister Ponmudi : மதவெறியை தூண்டிவிட்டு எல்லோரையும் பிரிக்க நினைக்கிறது ; பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி!
Embed widget