மேலும் அறிய

சிவகங்கையில் கிடைத்த தங்க பொருட்கள் - தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு

தாலிச்சரடில் உள் நுழைத்து கோர்த்து அணியப்பெறும் தங்கத்தாலான இப்பொருள்களுள் நீண்டு குழாய் போல் இருப்பதை யானைக் குழாய் என்றும், குழாய் என்றும், அழைக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி ஊராட்சி பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வில் முதுமக்கள் தாழி ஓடுகளுக்கிடையே கிடைக்கப்பெற்ற தங்கத்தாலான குழாய்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  “சிவகங்கை தொல்நடைக்குழு சார்பில் கொல்லங்குடி ஊராட்சி, சுந்தனேந்தல் சேகரம் உசிலனேந்தல் கண்மாய் பகுதியில்,  சிவகங்கை தொல்நடைக்குழு உறுப்பினர் சரவணன் மேற்பரப்பு கள ஆய்வில் முதுமக்கள்  தாழி ஓடுகளுக்கிடையே தங்கம் போன்ற பொருள் இரண்டு கிடைத்திருப்பதாக தகவல் அளித்தார். அங்கு சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டதில்  தாலி போன்ற கயிற்றுச் சரடில் கோர்த்து அணியக்கூடிய குண்டுமணி என அழைக்கப் பெறும்  அணிகலனாக இருக்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்தது.

சிவகங்கையில் கிடைத்த தங்க பொருட்கள் - தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு
 
குண்டுமணி, குழாய்
 
தாலிச்சரடில் உள் நுழைத்து கோர்த்து அணியப்பெறும் தங்கத்தாலான இப்பொருள்களுள் நீண்டு குழாய் போல் இருப்பதை யானைக் குழாய் என்றும், குழாய் என்றும், அழைக்கின்றனர். மேலும் நீட்சி இல்லாமல் சிறிய அளவில் உள்ளதை  மணி என்றும், குண்டுமணி என்றும், அழைக்கின்றனர்.
 
நமக்கு கிடைத்த பொருள்கள்
 
குழாய் போன்று நீண்டு இல்லாமலும் மணி போன்று சிறிய அளவினதாக இல்லாமலும் இடைப்பட்டதாக உள்ளது. மேலும் மத்தளத்தை போன்ற வடிவம் உடையதாக இருபக்கம் சிறியதாகவும் நடுப்பகுதி பெரியதாகவும் காணப்படுகிறது. இரு பக்கமுனைகளிலும் நடுப்பகுதியிலும் வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

சிவகங்கையில் கிடைத்த தங்க பொருட்கள் - தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு
 
பழமையான மணிக்குழாய்
 
ஒன்று பார்வைக்கு நல்ல நிலையிலும் மற்றொன்று சிதைந்த நிலையிலும் காணப் பெறுகிறது. இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்ததாலும்,  ஒன்று சிதைவுற்று இருப்பதாலும் இது பழமையானதாக இருக்கலாம், முதுமக்கள் தாழிக்குள் இருந்து வெகு நாட்பட்டு ஓடுகளோடு வெளிப்பட்டிருக்கலாம் என எண்ண முடிகிறது.  இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் முற்றிலும் சிதைந்த நிலையில் வெறும் ஓடுகளாய் பரந்து பட்டு மேற்பரப்பில் காணப்படுகிறது. இவ்வாறான மேடுகளை அடுத்தடுத்து காணமுடிகிறது. இந்த மேடுகளில் சுண்ணாம்புக் கற்கள் மேலெழும்பி அதிக அளவில் இருப்பதால் தாழி புதைத்த இடங்கள் என்பதை மேலும் உறுதி செய்ய முடிகிறது.

சிவகங்கையில் கிடைத்த தங்க பொருட்கள் - தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு
 
கண்டெடுத்த இரண்டு  குண்டுமணிகள் குறித்து தொல்லியல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பெற்றது. தொல்லியல் துறை ஆணையர் முழு கூடுதல் பொறுப்பு சிவானந்தம் வழிகாட்டுதலின்படி சிவகங்கை மாவட்ட தொல்லியல் அலுவலர் பரத் குமார் மற்றும் ராமநாதபுர மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் நேரடியாக இவ்விடத்தை பார்வையிட்டனர். பிறகு அவ்விடத்திலே கண்டெடுக்கப் பெற்ற தங்கத்தாலான பழமையான குழாய் போன்ற பொருள்கள் ஒப்படைக்கப் பெற்றன. மேலும் இப்பொருள் பற்றி தொல்லியல் துறையினரின் விரிவான ஆய்வுக்குப் பிறகு இறுதி முடிவு எட்டப்படும்” என்றார்.
 
வருவாய்த்துறை உதவியாளர் சுரேசு, மற்றும் சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன், பொருளாளர் ம. பிரபாகரன், உறுப்பினர் கா.சரவணன்,செயற்குழு உறுப்பினர் உ.முத்துக்குமார், தொல்நடைக் குழுவை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தாமிரபரணி ஆறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
சீமைக்கருவேல அகற்றும் இடங்களில் நாட்டு மரங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
விஜய் ஆண்டனி, பிரசாந்த் தொடங்கி வைத்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை: மதுரைக்கு புதிய மைல்கல்!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பழனி தண்டபாணி மடம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
Embed widget