மேலும் அறிய

Savukku Shankar: என்மீது போடப்படும் எல்லா வழக்குகளுக்கும்  உதயநிதிதான் காரணம் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

உதயநிதி நடத்தும் கார் பந்தயம் முடிவு பெறும் வரை, நான் வெளியில் வராத வகையில் தினசரி புதுப்புது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருதாகவும் குற்றம்சாட்டினார்.

சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜரான யூடியுபர் சவுக்கு சங்கருக்கு பிணை

யூடியூபர் சவுக்கு சங்கர்

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சவுக்கு சங்கரின் தாயார் கமலா வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் தேனியில் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், ”தான்... சிறையில் இருப்பதற்கு உதயநிதி தான் காரணம்” என சவுக்கு சங்கர் சிவகங்கையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிணை வழங்கி நீதிபதி உத்தரவு

பல்வேறு வழக்குகளில் கைதான  யூடியுபர்  சவுக்கு சங்கர்  இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு சொந்த பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.  பெண் காவலர்களை இழிவாக பேசியதாக தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சிவகங்கை அருகே  மதகுபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகங்கை சைபர் கிரைம் பிரிவில் கடந்த 6.5.2024 -ல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில்  சவுக்கு சங்கரை போலீஸார்  கைது செய்து சிவகங்கை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்த வழக்கில் அவரை சொந்த பிணையில் நீதிபதி ஜெ.ஆப்ரின் பேகம் விடுதலை செய்தார்.

சவுங்கு சங்கர் செய்தியாளர்களிடம்

இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...,”
 தன் மீது புதுப்புது வழக்குகளில் தினமும் கைது செய்யப்பட்டு வருகிறேன். எல்லா வழக்களுக்கும்  உதயநிதி ஸ்டாலின் தான் காரணம். உதயநிதி நடத்தும் கார் பந்தயம் முடிவு பெறும் வரை, நான் வெளியில் வராத வகையில் தினசரி புதுப்புது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Hc: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது பாய்ந்த வழக்கு: தென்மண்டல ஐ.ஜிக்கு நீதிமன்றம் பாராட்டு !

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - NIRF Ranking 2024: செம்ம சென்னை; என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 6ம் ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget