மேலும் அறிய

Madurai Hc: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது பாய்ந்த வழக்கு: தென்மண்டல ஐ.ஜிக்கு நீதிமன்றம் பாராட்டு !

காவல்துறையிடம் புகார் அளித்தால் தங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என காவல்துறையின் மீது சாமானிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் - நீதிபதி கருத்து.

காவல் நிலையத்தில் வைத்து வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி வழக்கு.
 
வழக்கறிஞர் மீது தாக்குதல்
 
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகுமாரன் தாக்கல் செய்த மனு. மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற, "தன்னை தாக்கிய துணை காவல் கண்காணிப்பாளர் DSP  மீது மேலூர் நீதித்துறை நடுவரின் உத்தரவின் அடிப்படையில், மேலூர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி புகழேந்தி, “வழக்கறிஞர் கடந்த 2022 ஆம் ஆண்டு உதவி காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையம் முன்பாக வைத்து தாக்கியுள்ளார். இது தொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் மனுதாரர் புகார் அளித்துள்ளார். இருப்பினும் வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் மேலூர் நீதித்துறை நடுவர் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 
ஒரு வழக்கறிஞர் காவல் நிலையத்தில் வைத்து தாக்கி உள்ள சூழலில் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த வழக்கை முறையாக மேலூர் காவல்துறை ஆய்வாளர் விசாரணை செய்யவில்லை எனவே இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
 
இந்நிலையில், ஐ.ஜி அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  அதில், "உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  உடனடியாக வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது. 
இதில் ரவிக்குமார், உதவி ஆணையர் ஆர்.எஸ்.புரம் மண்டலம், கோயம்புத்தூர் தற்போது பணிபுரிந்து வருகிறார் ராஜபாளையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் சார்லஸ் மற்றும்  காவலர்கள் கஜேந்திரன், பேரையூர் காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் ஜெயம் பாண்டியன் உள்ளிட்டோர் மீது 166, 294(b), 323, 506(i) IPC உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு வழக்கு பதிய  காலதாமதம் செய்த மேலூர் காவல் ஆய்வாளர் மன்னவன் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அக்காலகட்டத்தில் காவல் நிலைய அலுவலராக செயல்பட்டவர் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
ஐ.ஜிக்கு பாராட்டு
 
இதனை பார்த்த நீதிபதி தென்மண்டல காவல்துறை தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததை இந்த நீதிமன்றம் பாராட்டுகின்றது.  காவல்துறையிடம் புகார் அளித்தால் தங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என காவல்துறையின் மீது சாமானிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் வழக்கறிஞரை துணை காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையம் முன்பாக வைத்து தாக்கியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டே ஆறு மாதங்கள் ஆகியும், காவல்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுமில்லை. உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை பொதுமக்களிடையே காவல்துறை அதிகாரிகள் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டால், அதில் தங்களுக்கு நீதி கிடைக்காது எனும் எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. தவறு செய்த  காவலர்கள்  மீது உரிய நடவடிக்கையை எடுத்து, காவல்துறையின் கௌரவத்தை பாதுகாத்ததற்காக தென் மண்டல காவல்துறை தலைவருக்கு நீதிமன்றம் மீண்டும் பாராட்டுகளை தெரிவிக்கிறது. என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
Embed widget