மேலும் அறிய

சபரிமலை யாத்திரை: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கேரள அரசின் தீவிர ஏற்பாடுகள்!

பக்தர்களுக்காக கேரள அரசு அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை சன்னிதானம் மற்றும் பம்பையில் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 


சபரிமலை யாத்திரை: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கேரள அரசின் தீவிர ஏற்பாடுகள்!

இந்த நிலையில், கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி விழா நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள், நடப்பாண்டும் இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்காக கேரள அரசு சுகாதாரத்துறை விரிவான சிகிச்சை ஏற்பாடுகளை செய்துள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை சன்னிதானம் மற்றும் பம்பையில் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இங்கு அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வழியெங்கும் ஆக்சிஜன் பார்லருடன் கூடிய 22 அவசர சிகிச்சை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலையேறும் போது பக்தர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை கருத்திற்கொண்டு இதய நோய் அவசர சிகிச்சை மையங்கள் அப்பாச்சி மேடு, சரங்குத்தி போன்ற இடங்களில் செயல்படுகிறது. இங்கு வென்டிலேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானம் அரசு மருத்துவமனைகளில் கார்டியாலஜி யூனிட்டுகள் 24 மணி நேரமும் தயாராக உள்ளது.மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு அதிவேக சிகிச்சை கிடைப்பதற்கு தேவையான ஸ்ட்ரப்டோ கைனேஷ் போன்ற மருந்துகள் பம்பை மற்றும் சன்னிதானம் மருத்துவமனைகளில் கிடைக்கிறது. மண்டல சீசன் தொடங்கி 24 நாட்கள் கடந்த நிலையில் 95 ஆயிரத்து 385 பேர் பம்பை மற்றும் சன்னிதானம் மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதய பாதிப்புகளுடன் வந்த 103 பேரில் 81 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.


சபரிமலை யாத்திரை: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கேரள அரசின் தீவிர ஏற்பாடுகள்!

மாரடைப்பால் இதயம் செயலிழந்து வந்த 25 பேரில் ஆறு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பம்பை மற்றும் சன்னிதானத்தில் சிகிச்சை பெற வந்தவர்களில் 337 பேர், பத்தனம்திட்டா, கோட்டயம் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். பம்பையில் அவசர கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு சுகாதாரப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.  சன்னிதானம் மற்றும் பம்பை மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை அறை, ஐ.சி.யூ., எக்ஸ்ரே, லேப் வசதிகள் உள்ளது. இதய நோய் சிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பாக மலையேறவும், எவ்வித பாதிப்பும் இல்லாமல் தரிசனம் பெறவும் சுகாதாரத்துறை 24 மணி நேரம் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Embed widget