மேலும் அறிய

Madurai: 500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு 5000 கடையை திறக்க முயற்சி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !

30 ஆயிரம் கோடி குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை, கள்ளச்சாராயம் மது குறித்து வாய்திறக்கவில்லை, மேகதாது அணை குறித்து வாய் திறக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம் ஆலம்பட்டியில் உறுப்பினர் படிவம் திரும்ப பெறும் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் மதுரை அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழக செயளாலரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அதில்..,”கருணாநிதி மகன் என்ற அரசியல் பின்புலத்துடன் தான் ஸ்டாலின் திமுக கட்சி தலைவரானார். அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சராகி உள்ளார். ஆனால் எடப்பாடியார் 50 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர் படிப்படியாக கிளைச் செயலாளராக இருந்து உயர்ந்து கழக பொதுச் செயலாளராகி ஒரு கோடியே 49 லட்சம் வாக்குகள் பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளார். கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ஆவின் கொள்முதல் ,உற்பத்தி அதிகரித்து இருந்தது. தற்போது ஆவின் நிர்வாக சீர்கேடால் அமுல் நிறுவனம் தமிழகத்தில் நுழைந்துள்ளது.

Madurai: 500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு 5000 கடையை திறக்க முயற்சி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால் மாற்று வழிவில் 5000 கடையை திறந்து விடுவார், மேலூரில் கூட டாஸ்மாக்கில் மது குடித்து ஒருவர் பலியாகி உள்ளார் மற்றொரு உயிர் ஊசலாடி கொண்டிருக்கிறது. அதேபோல் ஒரு மாணவி தன் தந்தையின் குடியை நிறுத்த கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற செய்தால் தமிழகம் தலை குனிந்து உள்ளது. மக்களின் உரிமையை குறித்து எடப்பாடியார் குரல் எழுப்பி வருகிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் ஸ்டாலிடம் கேட்டால் அதற்கு பதில் சொல்ல மறுக்கிறார். அன்று காவிரி பிரச்னைக்காக 21 நாட்கள் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை முடக்கி வெற்றி பெற்றார்கள்.  இப்போது மேகதாது பிரச்னையில் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைதியாக உள்ளனர்.

Madurai: 500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு 5000 கடையை திறக்க முயற்சி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
 
30 ஆயிரம் கோடி குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை, கள்ளச்சாராயம் மது குறித்து வாய்திறக்கவில்லை, மேகதாது அணை குறித்து வாய் திறக்கவில்லை, ஆனால் தனது மகனை  உதயநிதிக்கு அதிகாரத்தை அளிக்கவும், சாப்பிடவதற்கும் மட்டும் தான் முதலமைச்சர் வாய திறக்கிறார். போக்குவரத்து துறையில் ஒன்னரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து நிலையில் தற்போது  20,000 காலி பணியிடங்கள் இந்த போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாக சுமார் இன்றைக்கு 2,000 பேருந்துகள் செயல்படாத ஒரு முடங்கிய நிலையிலேயே இதனால் மக்களுக்கு சேவைகள் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கிறது.  
 
இந்த 2,000 பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்ன காரணம் என்றால் 20,000 பணியாளர்கள் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் பற்றாக்குறையாகும் இதற்கு பணிமனைகள் நிர்வாக சீர்கேடு ஆகும். மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படாததால், பணியிடங்களுக்கு செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டியதால் தனியார் அரசு பேருந்து கட்டணம் செலுத்தி தான் இன்றைக்கும் செல்கிறார்கள். இதுதான் இன்றைய எதார்த்தமான நிலைமையாக இருக்கிறது. அமைச்சர்கள் புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள். புதிய பேருந்து கொள்முதல் செய்தால் தானே  புதிய வழித்தடத்தில் பேருந்து விட முடியும். ஏற்கெனவே பழைய வழிதடத்தை ரத்து செய்துவிட்டு, அதை புதிய வழித்தடமாக அமைச்சர்களை திருப்திப்படுத்துவதற்காக  ஒரு நகைச்சுவை காட்சி அரங்கேற்றமும் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது.
 

Madurai: 500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு 5000 கடையை திறக்க முயற்சி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
 பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே இவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்று சொன்னால், பள்ளிகள், கல்லூரிகள் திறந்து விட்டால் மாணவர்கள் செல்வதற்கு மிகப்பெரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பள்ளி திறப்பதற்கு முன்பாகவே உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய அளவிலே மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ளுமா?  நாள்தோறும் சுமார் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 1.70 கோடி மக்கள்  இன்றைக்கு பயணம் செய்கிறார்கள் இந்த புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 2022,2023 ஆண்டு  மானிய கோரிக்கையில்12,000 கோடி வருமானம் ஈட்டிய நிலையில்  எரிபொருள், உதிரி பாகங்கள்,ஊழியர்களுக்கு சம்பளம், வட்டி என 17,000 கோடி செலவு எனவும் 5000 கோடி பற்றாக்குறை உள்ளது என்று பேசினார்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget