மேலும் அறிய

Madurai: 500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு 5000 கடையை திறக்க முயற்சி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !

30 ஆயிரம் கோடி குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை, கள்ளச்சாராயம் மது குறித்து வாய்திறக்கவில்லை, மேகதாது அணை குறித்து வாய் திறக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம் ஆலம்பட்டியில் உறுப்பினர் படிவம் திரும்ப பெறும் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் மதுரை அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழக செயளாலரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். அதில்..,”கருணாநிதி மகன் என்ற அரசியல் பின்புலத்துடன் தான் ஸ்டாலின் திமுக கட்சி தலைவரானார். அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சராகி உள்ளார். ஆனால் எடப்பாடியார் 50 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர் படிப்படியாக கிளைச் செயலாளராக இருந்து உயர்ந்து கழக பொதுச் செயலாளராகி ஒரு கோடியே 49 லட்சம் வாக்குகள் பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளார். கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ஆவின் கொள்முதல் ,உற்பத்தி அதிகரித்து இருந்தது. தற்போது ஆவின் நிர்வாக சீர்கேடால் அமுல் நிறுவனம் தமிழகத்தில் நுழைந்துள்ளது.

Madurai: 500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு 5000 கடையை திறக்க முயற்சி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால் மாற்று வழிவில் 5000 கடையை திறந்து விடுவார், மேலூரில் கூட டாஸ்மாக்கில் மது குடித்து ஒருவர் பலியாகி உள்ளார் மற்றொரு உயிர் ஊசலாடி கொண்டிருக்கிறது. அதேபோல் ஒரு மாணவி தன் தந்தையின் குடியை நிறுத்த கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற செய்தால் தமிழகம் தலை குனிந்து உள்ளது. மக்களின் உரிமையை குறித்து எடப்பாடியார் குரல் எழுப்பி வருகிறார். இது குறித்து பத்திரிகையாளர்கள் ஸ்டாலிடம் கேட்டால் அதற்கு பதில் சொல்ல மறுக்கிறார். அன்று காவிரி பிரச்னைக்காக 21 நாட்கள் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை முடக்கி வெற்றி பெற்றார்கள்.  இப்போது மேகதாது பிரச்னையில் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைதியாக உள்ளனர்.

Madurai: 500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு 5000 கடையை திறக்க முயற்சி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
 
30 ஆயிரம் கோடி குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை, கள்ளச்சாராயம் மது குறித்து வாய்திறக்கவில்லை, மேகதாது அணை குறித்து வாய் திறக்கவில்லை, ஆனால் தனது மகனை  உதயநிதிக்கு அதிகாரத்தை அளிக்கவும், சாப்பிடவதற்கும் மட்டும் தான் முதலமைச்சர் வாய திறக்கிறார். போக்குவரத்து துறையில் ஒன்னரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து நிலையில் தற்போது  20,000 காலி பணியிடங்கள் இந்த போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாக சுமார் இன்றைக்கு 2,000 பேருந்துகள் செயல்படாத ஒரு முடங்கிய நிலையிலேயே இதனால் மக்களுக்கு சேவைகள் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கிறது.  
 
இந்த 2,000 பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்ன காரணம் என்றால் 20,000 பணியாளர்கள் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் பற்றாக்குறையாகும் இதற்கு பணிமனைகள் நிர்வாக சீர்கேடு ஆகும். மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படாததால், பணியிடங்களுக்கு செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டியதால் தனியார் அரசு பேருந்து கட்டணம் செலுத்தி தான் இன்றைக்கும் செல்கிறார்கள். இதுதான் இன்றைய எதார்த்தமான நிலைமையாக இருக்கிறது. அமைச்சர்கள் புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள். புதிய பேருந்து கொள்முதல் செய்தால் தானே  புதிய வழித்தடத்தில் பேருந்து விட முடியும். ஏற்கெனவே பழைய வழிதடத்தை ரத்து செய்துவிட்டு, அதை புதிய வழித்தடமாக அமைச்சர்களை திருப்திப்படுத்துவதற்காக  ஒரு நகைச்சுவை காட்சி அரங்கேற்றமும் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது.
 

Madurai: 500 டாஸ்மாக் கடையை மூடிவிட்டு 5000 கடையை திறக்க முயற்சி - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
 பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே இவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்று சொன்னால், பள்ளிகள், கல்லூரிகள் திறந்து விட்டால் மாணவர்கள் செல்வதற்கு மிகப்பெரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பள்ளி திறப்பதற்கு முன்பாகவே உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய அளவிலே மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ளுமா?  நாள்தோறும் சுமார் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 1.70 கோடி மக்கள்  இன்றைக்கு பயணம் செய்கிறார்கள் இந்த புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 2022,2023 ஆண்டு  மானிய கோரிக்கையில்12,000 கோடி வருமானம் ஈட்டிய நிலையில்  எரிபொருள், உதிரி பாகங்கள்,ஊழியர்களுக்கு சம்பளம், வட்டி என 17,000 கோடி செலவு எனவும் 5000 கோடி பற்றாக்குறை உள்ளது என்று பேசினார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ABP Premium

வீடியோ

ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Volvo EX60 with Gemini AI: இப்போ காரோட பேசிட்டே போகலாம்! கூகுள் ஜெமினி ஏஐ உடன் வால்வோ EV SUV; யம்மா.! இவ்வளவு ரேஞ்சா.?
இப்போ காரோட பேசிட்டே போகலாம்! கூகுள் ஜெமினி ஏஐ உடன் வால்வோ EV SUV; யம்மா.! இவ்வளவு ரேஞ்சா.?
Embed widget