மேலும் அறிய

Ramanathapuram: 'ஆடுகளம் பட பாணியில் சேவல் சண்டை’ தப்பியோடிய விவசாயி தவறி விழுந்து பலி..!

அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியபோது போலீஸ்துரத்தியதால் தப்பியோடிய விவசாயி சாலையில் தவறி விழுந்து உயிரிழந்தார்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் ஆடிப் பெருக்கையொட்டி கண்மாய் பகுதியில் சேவல் சண்டை நடத்தப்பட்டது. இந்த போட்டி அனுமதியின்றி நடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடலாடி போலீசார் அங்கு சென்றனர். போலீசுக்கு பயந்து சேவல் சண்டை போட்டி நடத்தியவர்கள் அங்கிருந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர். அப்போது பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க விவசாயி ஜோதிநாதன் தடுமாறி கீழே விழுந்ததில் அதே இடத்திலேயே சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

விவசாயி ஜோதிநாதனை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 3 காவலர்கள் தாக்கியதால்தான் என்று கூறி முதுகுளத்தூர்-சாயல்குடி சாலையில் அவரது உறவினர்களும் கிராம மக்களும் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலோ இக்னேசியஸ், துணை கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ, கடலாடி வட்டாட்சியர் சேகர், ஆய்வாளர்கள் ஜான்சிராணி, மோகன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயி ஜோதிநாதனை உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் 3 காவலர்கள் மதுபோதையில் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியும் உயிரிழந்த ஜோதிநாதனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஜோதிநாதன் இறப்பு குறித்து விசாரணை நடத்த கோரி கடலாடி போலீஸ் நிலையத்தையும் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Ramanathapuram: 'ஆடுகளம் பட பாணியில் சேவல் சண்டை’  தப்பியோடிய விவசாயி தவறி விழுந்து பலி..!

இதையடுத்து, ஜோதிநாதன் இறப்பு குறித்து முறையான விசாரணை நடைபெறும். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் ஜோதிநாதன் உடலானது பிரேத பரிசோத்னைக்காக பரிசோதனைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜோதிநாதனின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையின்பேரில் உதவி ஆய்வாளர் சரவணன் மதுபோதையில் இருந்தாரா என்பதை அறிய காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டதில் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 3 காவலர்களும் மது அருந்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஜோதிநாதனின் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த விவசாயி ஜோதிநாதனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினர்களும், கிராம மக்களும் தொடர்ந்து காவல்துறையினரிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடலாடி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி நடத்தப்படும் சேவல் சண்டை போட்டிகளை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
Embed widget