நாளை தேனியில் மின் தடை! முக்கிய அறிவிப்பு: மின்சார வாரியம் வெளியிட்ட தகவல்! விபரம் இதோ..
மின் நுகர்வோர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 09 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் நாளை நவம்பர் 14 - வெள்ளிக்கிழமை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் தடை
தேனி மாவட்டத்தில், வைகை அணை மற்றும் அன்னஞ்சி துணை மின்நிலையங்களில் நாளை மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அரைப்படித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்




















