மேலும் அறிய

"10 லட்ச ரூபாய் கொடுத்தது தமிழ் மண்ணில் தீய முன்னுதாரணம் - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு !

கள்ளச்சாராய உயிரிழப்பில் பத்து லட்ச ரூபாய் கொடுத்தது தமிழ் மண்ணில் தீய முன்னுதாரணம் : மேலூரில் நடைபெற்ற புத்தக விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு.

தமிழ் மண்ணில் உருவாக்கி இருப்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர்கள் நல்வழிப்படுத்த வேண்டும் என பேசினார்.
 
Kallakurichi Illicit Liquor
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150 -க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி மது பிரியர்கள் குடித்தின் விளைவாக  உடல்நலம்  பாதிக்கப்பட்டனர்.  மேலும் திடீர் வாந்தி, மயக்கம், வயிற்று எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
 
அதனை தொடர்ந்து பலர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக தற்போது வரை 57 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்‌. மேலும், 100 -க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.
 
அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளச்சாராய உயிரிழப்பில் பத்து லட்ச ரூபாய் கொடுத்தது தமிழ் மண்ணில் தீய முன்னுதாரணம் என மேலூரில் நடைபெற்ற புத்தக விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி பேசியுள்ளார்.
 
நீரதிகாரம் எனும் புத்தகம் பற்றிய நிகழ்ச்சி
 
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்னி குவிக்கின் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்று நிகழ்வுகள் எனும் தலைப்பில் நீரதிகாரம் எனும் புத்தகம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் , பேச்சாளர் பாரதி பாஸ்கர், நீரதிகாரம் நூல்  எழுத்தாளர் அ.வெண்ணிலா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
நீதியரசர்
 
அப்போது நிகழ்வில், நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் பேசுகையில்...,”வடக்கே சுதந்திர போராட்டம் தீவிரமடையும் முன்பே தமிழகத்தில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியார் போன்றோர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.  தமிழகத்தில் நூறுநாள் வேலைத்திட்டம் மூலம், கிராமப்புறங்களில் இளைஞர்கள் சோம்பேறியாக வைக்கப்பட்டு வருகின்றனர். அதில் பாதி சம்பளம் பெறும் இளைஞர்கள் அதை ஒரு கடையில் கொடுத்து உண்மையான குடிமகனாக மாறிவிடுகின்றனர். அதிலும் சிலர் மலிவு விலையில் கிடைக்கின்றாதா என பார்க்கின்றனர்.
 
அப்படி தேடிப்போன ஒரு கூட்டம் தான் கள்ளக்குறிச்சியில் மாண்டு போயுள்ளனர். இதற்கு 10 லட்சம் கொடுத்து தீய முன்னுதாரணம் தமிழ் மண்ணில் உருவாக்கி இருப்பதை நீங்கள் உணர வேண்டும். இளைஞர்கள் நல்வழிப்படுத்த வேண்டும்" என பேசினார்.
 
பாரதி பாஸ்கர்
 
தொடர்ந்து பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில்,”எழுத்தாளரின் மாற்று கருத்தை பதிவு செய்தால் கூட நிறைய பேருக்கு தற்போது பொறுத்த கொள்ள முடியவில்லை. ஆங்கிலேயர்கள் சுரண்டலுக்காக தான் ரயில் வழித்தடங்களை நிறுவினர். அவர்களுக்கு பயன்படும் வகையில் இங்குள்ள தானியங்களை கப்பல் மூலம் இங்கிலாந்து கொண்டு செல்லவே இதுபோன்ற திட்டங்களை அவர்கள் கொண்டு வந்தனர்.
 
ஆனால் இங்கிருந்தவர்கள் பஞ்சத்தால் வாடினார். 20 விழுக்காடு மக்கள் அப்போது மதுரையில் பஞ்சத்தால் இறந்துள்ளனர். இதனை மாற்ற பென்னிகுவிக் மாதிரியான ஆட்கள் இங்கு தீவிரம் காட்டியுள்ளனர்” என பேசினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : ‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
MK STALIN: கோவையை மொத்தமாக தட்டி தூக்கணும்! செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு
கோவையில் ஒரு தொகுதியையும் விட்டு விட கூடாது...மொத்தமா தட்டி தூக்கணும்! செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் உத்தரவு
Chennai: வாட்டர் மெட்ரோ, டிராம்.. சென்னையில் அடுத்த 25 வருஷத்துக்கு இதுதான் ஸ்கெட்ச்
Chennai: வாட்டர் மெட்ரோ, டிராம்.. சென்னையில் அடுத்த 25 வருஷத்துக்கு இதுதான் ஸ்கெட்ச்
Blood Money: ரத்தப் பணம் பற்றி தெரியுமா? எந்தெந்த இஸ்லாமிய நாடுகளில் அமலில் உள்ளது? இந்த நடைமுறை எதற்கு?
Blood Money: ரத்தப் பணம் பற்றி தெரியுமா? எந்தெந்த இஸ்லாமிய நாடுகளில் அமலில் உள்ளது? இந்த நடைமுறை எதற்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு
மிரட்டி சாதித்த நிதிஷ்! பாஜக ப்ளான் FLOP! அடுத்த முதல்வர் யார்?
”பீகார் மாடல் கைகொடுக்குமா? பாமக, தவெக-க்கு அழைப்பு பாஜகவின் MASTERPLAN | ADMK | BJP | NDA Alliance

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : ‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
MK STALIN: கோவையை மொத்தமாக தட்டி தூக்கணும்! செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு
கோவையில் ஒரு தொகுதியையும் விட்டு விட கூடாது...மொத்தமா தட்டி தூக்கணும்! செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் உத்தரவு
Chennai: வாட்டர் மெட்ரோ, டிராம்.. சென்னையில் அடுத்த 25 வருஷத்துக்கு இதுதான் ஸ்கெட்ச்
Chennai: வாட்டர் மெட்ரோ, டிராம்.. சென்னையில் அடுத்த 25 வருஷத்துக்கு இதுதான் ஸ்கெட்ச்
Blood Money: ரத்தப் பணம் பற்றி தெரியுமா? எந்தெந்த இஸ்லாமிய நாடுகளில் அமலில் உள்ளது? இந்த நடைமுறை எதற்கு?
Blood Money: ரத்தப் பணம் பற்றி தெரியுமா? எந்தெந்த இஸ்லாமிய நாடுகளில் அமலில் உள்ளது? இந்த நடைமுறை எதற்கு?
Farmers: வங்கி கணக்கில் நாளை வரப்போகுது ரூ.4,000.! குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்
வங்கி கணக்கில் நாளை வரப்போகுது ரூ.4,000.! குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்
செவி சாய்க்காத த.வெ.க., - கூட்டணிக்காக மதுரையில் பிரேமலதாவை சந்தித்தாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் !
செவி சாய்க்காத த.வெ.க., - கூட்டணிக்காக மதுரையில் பிரேமலதாவை சந்தித்தாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் !
Free Visa: இந்தியர்களுக்கு கட்.. இலவச விசா கிடையாது, கடத்தல் & அபேஸ் - ஈரானின் முடிவிற்கு காரணம் என்ன?
Free Visa: இந்தியர்களுக்கு கட்.. இலவச விசா கிடையாது, கடத்தல் & அபேஸ் - ஈரானின் முடிவிற்கு காரணம் என்ன?
Tata Sierra: சொகுசு, பாதுகாப்பு, வசதி.. டாடா சியாராவை வாங்க தூண்டும் 8 அம்சங்கள் - கவர்ச்சிகர எஸ்யுவி கார்
Tata Sierra: சொகுசு, பாதுகாப்பு, வசதி.. டாடா சியாராவை வாங்க தூண்டும் 8 அம்சங்கள் - கவர்ச்சிகர எஸ்யுவி கார்
Embed widget