மேலும் அறிய

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

’’முளைப்பாரி, ஜோதி ஓட்டம், ஊர்வலம், பேரணிக்கு தடை விதிக்கப்படுவதுடன் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் திட்டவட்டம்’’

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். இவர்  தனது வாழ்நாளில் அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து செயல்பட்டு வந்தார். கடைசி வரையிலும் பிரமச்சாரி வாழ்க்கையையே வாழ்ந்தார். பசும்பொன்னில், தனது வீட்டில் உள்ள பூஜை அறையி்ல் தினசரி தேவர் நீண்ட நேரம் தியானத்திலும், பூஜையி்ல் ஈடுப்பட்டவர். சிறந்த ஆன்மிகவாதியும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு வருடமும், அக்.28, 29, 30  ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட மண்டபம் வளாகத்தில் நடைபெறுகிறது. தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்டோபர் 30  ஆகும். எனவே ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவரின் ஆன்மீக வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் தேவர் நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டு வருகிறது.


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

அந்த வகையில், இந்த ஆண்டு  முத்துராமலிங்க தேவரின் 114 -வது ஜெயந்தி விழாவும், 59வது குரு பூஜையையும் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் 5 நபர்களுக்கு மேல் ஒன்றாக கூட கூடாது, வாடகை வாகனங்களில் வரக்கூடாது, முளைப்பாரி, ஜோதி ஓட்டம் ஊர்வலம், பேரணி போன்ற நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை, வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார். முன்னதாக குருபூஜைக்கான  முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) காமாட்சிகணேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக், கூடுதல் ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள்  பசும்பொன் கிராமத்திற்கு  வந்தனா்.



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

அங்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள், முக்கிய பிரமுகா்களின் வழித்தடங்கள், வரவேற்பு நிகழ்வுகள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனா். நினைவாலயத்தில் உள்ள தியானம் மண்டபம், கூட்ட அரங்கம், சுற்றுப்புறச் சுவா் உள்ளிட்டவைகளில் நடைபெறும் வண்ணம் தீட்டும் பணிகளையும் பாா்வையிட்டனா். மேலும் கூட்ட நெரிசலைத் தவிா்க்க பசும்பொன் கிராமத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறும் வகையில் வழித்தடங்களை சீரமைத்தல், குடிநீா் தொட்டிகள், கூடுதல் தற்காலிகக் கழிப்பறைகள், பொதுமக்கள் நடந்து வரும் பாதைகளில் மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை வழக்கம்போல் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget