பழனி முருகன் கோயில் கூட்ட நெரிசல்: தரிசனத்திற்கு 3 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் அவதி
பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் கிருத்திகை தினம் என்பதாலும் பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோவில் பழனி முருகன் கோயில்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், நேற்று கிருத்திகை தினத்தை முன்னிட்டும், பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் பக்தர்களின் வருகை வழக்கத்தை விடப் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.
இதன் காரணமாக, பொது தரிசன வரிசையிலும், கட்டணத் தரிசன வரிசையிலும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானைச் தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், நெரிசலைத் தவிர்க்கவும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகப் படிப்பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மாற்றுப் பாதை மூலம் பக்தர்கள் சிரமமின்றி மலைக்குச் செல்ல ஏதுவாக அமைந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மோர் மற்றும் குடிநீர் வசதிகள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், கூடுதல் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்





















