OPS பிரச்சாரம் வைரல்: “EPS பற்றி பேசுங்கள்” – கிராம மக்களின் கோரிக்கை, கடும் பதில்!
அம்மா, சின்னம்மா அவர்களால் வழங்கப்பட்ட முதல்வர் பதவியை அவர்கள் பிரச்சினை முடிந்து முதல்வராகும் தகுதி அடைந்த பிறகு நான் அவர்களிடம் முதல்வர் பதவியை பத்திரமாக ஒப்படைத்தேன் - ஓபிஎஸ்

பண்ணை தோப்பு குக் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அவருடைய வருகையை எதிர்பாராத பெண்கள் உற்சாகமாக ஆடி குழவையிட்டு ஆராத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேசுங்கள் என அன்பு கட்டளை இட்ட பத்ரகாளிபுரம் கிராமத்தினரிடம். அவரைப் பற்றி பேச மாட்டேன் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தும் வம்படியாக எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்ய வைத்தனர் ஆதரவாளர்கள்.

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத்துக்கு உட்பட்ட போடி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் போடி சட்டமன்ற திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் குறிப்பாக பத்ரகாளிபுரம் அருகே உள்ள சாலிமரத்துப்பட்டி பண்ணை தோப்பு குக் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தங்களது குக் கிராமங்களில் யாரும் பிரச்சாரம் மேற்கொள்ள வராத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வருகை எதிர்பாராத கிராம மக்கள் பிரச்சாரம் மேற்கொள்ள அதிரடியாக வந்ததால் மகிழ்ச்சியின் ஆரவாரத்தில் பெண்கள் தங்களை மெய் மறந்து ஆடியபடி உற்சாகமாக ஓ பன்னீர்செல்வத்தை வரவேற்றனர். தொடர்ந்து பேசிய ஓ பன்னீர்செல்வம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் கீழ் 5ஆம் வகுப்பு வரை உணவு உண்டு வரும் நிலையில் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பிறகு எட்டாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கப்படும் என தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ச்சியாக பத்ரகாளிபுரம் பகுதியில் பிரச்சார மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிராமத்தினர் அவரை பேச விடாமல் எடப்பாடி பழனிச்சாமி பற்றி விமர்சனம் செய்யுங்கள் என அன்பு கட்டளை இட்டனர். அதற்கும் செவிசாய்க்காமல் அவரைப் பற்றி பேசமாட்டேன் என தெரிவித்தும் விடாத கிராம மக்கள் எடப்பாடி ஒழிக ஓபிஎஸ் வாழ்க என கோசமிட்டனர்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்தார். அதில் தனக்கு இருமுறை அம்மா அவர்களாலும் ஒரு முறை சின்னம்மா அவர்களாலும் வழங்கப்பட்ட முதல்வர் பதவியை அவர்கள் பிரச்சினை முடிந்து முதல்வராகும் தகுதி அடைந்த பிறகு நான் அவர்களிடம் முதல்வர் பதவியை பத்திரமாக ஒப்படைத்தேன். உங்களில் ஒருவனாக பிறந்த நான் நன்றியுடன் இருப்பேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சின்னம்மா அவர்கள் தட்டிக் கொடுத்து முதல்வராக்கினார் தற்போது அவரோ சின்னம்மாவை சூரியனை பார்த்து நாய் குறைக்கிறது என பேசுகிறார். நன்றி கெட்ட மனிதன் அரசியல் இருக்கிறார் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி என்று அவரது பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















