மேலும் அறிய

madurai | மதுரை: வீட்டில் சட்டவிரோதமாக செய்த காரியம்... வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே வீட்டில் வைத்து சட்டவிரோதமாக வெடி தயாரித்து கொண்டிருந்த போது வெடி விபத்து - ஒருவர் பலி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். இவர் நல்லிவீரன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் மாடியில் வைத்து சட்டவிரோதமாக வெடி தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டாசு தயாரிப்பு பணியின் போது வெடி விபத்து ஏற்பட்டது.  இந்த வெடி விபத்தில் மாடி முழுவதும் இடிந்து சிதறியது, இதில் தேங்கல்பட்டியைச் சேர்ந்த அஜித் பாண்டி என்ற தொழிலாளி 100 மீட்டர் தொலைவிற்கு உடல் சிதறி பலியானார்.


madurai | மதுரை: வீட்டில் சட்டவிரோதமாக செய்த காரியம்... வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மேலும் கீழ் வீட்டில் வாடகைக்கு குடி இருந்த விவிதா என்ற பெண் மற்றும் அவரது ஒன்பது மாத கைக் குழந்தை ஹர்சிதா என இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டாசுகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சூழலாலும், இடிந்த நிலையில் உள்ள வீட்டுக்குள் செல்ல முடியாத நிலையில் தடயவியல் மற்றும் மோப்ப நாய் கொண்டு மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வீட்டின் உரிமையாளரான பிரவீனை தேடி வருகின்றனர்.


madurai | மதுரை: வீட்டில் சட்டவிரோதமாக செய்த காரியம்... வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் ”பிரவீன் பட்டாசுக் கடைக்கு தேவையான பட்டாசுகளை பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். அவரது வீட்டு மாடியிலும் பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் பட்டாசு தயார் செய்ய மருந்துகள் கலக்கும் போது வெடித்திருக்கலாம். இது மிகப்பெரும் பாதிப்பாக ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பிரவீனுடன் வேறு நபர்கள் தொடர்பு ஏற்படுத்தி பட்டாசு தயாரித்துள்ளனரா, எங்கு எங்கு பட்டாசு தயாரித்துள்ளனர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.


madurai | மதுரை: வீட்டில் சட்டவிரோதமாக செய்த காரியம்... வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Local Body Election: | 'போட்டியின்றி தேர்வாக ஆசைப்படுகிறார்கள்; ஜனநாயகத்தை காக்க வேண்டும்' : சுயேட்சை வேட்பாளருக்கு தொடரும் மிரட்டல்?

இந்தாண்டு 2022-ஆண்டு தொடக்கத்தில் முதல் நாளே விருதுநகரில் பட்டாசு விபத்து ஏற்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து விருந்து சிவகாசி சாத்தூர் பகுதியில் பட்டாசு விபத்தானது ஏற்பட்டது. தற்போது மதுரை மாவட்டத்திலும் பட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று சட்ட விரோதமாக பட்டாசு தயார் செய்யும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai corporation election 2022 | “எடப்பாடி முடிந்தா இதை செய்யட்டும்... சவால் விடுகிறேன்..” - உதயநிதி ஸ்டாலின்

தலைப்பு செய்திகள்

காரையூரில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு: வண்ணக்க நல்லூர் ரகசியம் அம்பலம்!
காரையூரில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு: வண்ணக்க நல்லூர் ரகசியம் அம்பலம்!
கிராமங்களில் ஆடு திருடுவது போல் எம்.எல்.ஏ.,க்களை களவாணி வேலை செய்கிறார்கள் - ttv தினகரன் காட்டம் !
கிராமங்களில் ஆடு திருடுவது போல் எம்.எல்.ஏ.,க்களை களவாணி வேலை செய்கிறார்கள் - ttv தினகரன் காட்டம் !
சிவகங்கை எல்லையில் கிராவல் மண் கொள்ளை: விவசாயம் அழிகிறது, நடவடிக்கை எங்கே?
சிவகங்கை எல்லையில் கிராவல் மண் கொள்ளை: விவசாயம் அழிகிறது, நடவடிக்கை எங்கே?
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
Embed widget