மேலும் அறிய

ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

நகராட்சி ஆணையர் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ஆக்கிரமிப்பு என்று தெரிந்தாலும் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியிலுள்ள சேவியர் கோவில் தெருவில் தனிநபர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு.

வழக்கு குறித்து மேலூர் நகராட்சி ஆணையர் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் சாயிட் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த மனு. அதில், "மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள சேவியர் கோவில் தெருவில் (அப்துல் கலாம் ஆசாத் தெரு) தனிநபர் செய்துள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுரை மாவட்டம், மேலூர் பகுதியிலுள்ள சேவியர் கோவில் தெருவில் தனிநபர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. உடனடி நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை

ஆக்கிரமிப்பு என்று தெரிந்தாலும் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. என கருத்து தெரிவித்தனர். மேலும் வழக்கு குறித்து மேலூர் நகராட்சி ஆணையர் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.



வழக்கு 2

மின் கம்பம் அமைக்க வெட்டப்பட்ட மரங்களுக்கு ஏற்ப சாலையின் மறுபுறத்தில் இரு மடங்கு புதிய மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் - தலைமை நீதிபதி

லால்குடியிலிருந்து-  குக்கூர் சாலை வரை மின் கம்பங்களை அமைக்கும் போது மரங்களை வெட்டாமல் மாற்றுப்பாதையில் மின்கம்பங்கள் அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

திருச்சி லால்குடியை சேர்ந்த அசோக் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், "திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள எல்.அபிசேகபுரம் கிராமத்தில் 200 குடும்பங்கள் வசிக்கின்றது. இந்த கிராமத்தில் துணை மின்நிலையம் அமைப்பதற்காக லால்குடியிலிருந்து குக்கூர் சாலையில் பனை மரங்கள் உள்ள பகுதியில் பனை மரங்களை வெட்டி மின் கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

50 ஆண்டு பழமையான பலன் தரும் பனை மரங்களை வெட்டாமல், மாற்று பாதையில் மின் கம்பம் அமைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி,   ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மின்கம்பங்களை அமைப்பதற்கு 13 பனை மரங்களை வெட்ட வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மின் கம்பங்கள் அமைக்கும்போது முடிந்த அளவு மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் தான் மரங்களை வெட்ட வேண்டும். வெட்டப்பட்ட மரங்களுக்கு ஏற்ப சாலையின் மறுபுறத்தில் இரு மடங்கு புதிய மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தரை.

தலைப்பு செய்திகள்

அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை - சங்க கால ரகசியம் வெளிச்சத்திற்கு !
கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை - சங்க கால ரகசியம் வெளிச்சத்திற்கு !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget