மேலும் அறிய
மதுரை: இடி மின்னல் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம்!
கனமழை பெய்ததின் காரணமாக துரதிர்ஷ்டவசமாக இடி-மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இயற்கை இடர்பாட்டின் போது அவரது மாடும் சம்பவ இடத்திலேயே இறந்தது.

அமைச்சர் நிர்மல்குமார்
Source : whatsapp
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சம் பேரிடர் நிவாரணத் தொகை காசோலை வழங்கினார்.
இடி-மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், ஆ.கொக்குளம் உள்வட்டம், உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (வயது 55, த/பெ. சிவனாண்டி) என்ற விவசாயி, கடந்த 27.06.2026 அன்று மாலை தனது தோட்டத்தில் இருந்த மாட்டினை அவிழ்ப்பதற்காகச் சென்ற இடத்தில் கனமழை பெய்ததின் காரணமாக துரதிர்ஷ்டவசமாக இடி-மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இயற்கை இடர்பாட்டின் போது அவரது மாடும் சம்பவ இடத்திலேயே இறந்தது.
நேரில் சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, இடிமின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி சிவலிங்கம் அவர்களின் குடும்பத்தினரை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். தொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் (SDRF) உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.4,00,000- (ரூபாய் நான்கு இலட்சம் மட்டும்) நிவாரணத் தொகைக்கான காசோலை மற்றும் மாடு இறந்ததற்கான நிவாரணத் தொகை ரூ.37,500- க்கான காசோலைகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரசி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சிவஜோதி அவர்கள், வட்டாட்சியர் முத்துலெட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















