மேலும் அறிய

கொச்சைப்படுத்தி பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல - ஆர்.பி.உதயகுமார்

ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று வாயாலே வடைசுடுகிறார்கள். ஆனால் களப்பணியில் பூஜ்ஜியமாக உள்ளார்கள் - தமிழக அரசு குறித்து ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார்

 
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்...,” வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த மூன்று மாதங்களிலும் தமிழ்நாட்டிற்கு தொடர்மழை, கனமழை போன்ற மழைப்பொழிவு கிடைக்கக்கூடிய பருவ காலமாகும். இந்த மூன்று மாத காலங்களிலே அக்டோபர், நவம்பர், டிசம்பர் மழை நீர் பருவ காலத்திலே அந்த மழை நீரை சேமித்து வைப்பதற்கும், தொடர் மழை, கனமழை வருகிற போது அதிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு நிவாரண உதவியை வழங்குவதற்கும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார்.  
 
 

முதலமைச்சர் பதவிக்கு அழகு அல்ல

மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று வாயாலே வடை சுடுகிறார்கள். ஆனால் களப்பணியில் பூஜ்ஜியமாக உள்ளார்கள். தற்போது பெய்யும் கனமழையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது ஆனால் திமுக அரசு போர்க்கால அடிப்படையில் தாலுகா வாரியாக, ஊராட்சி வாரியாக குழுக்களை அமைக்கவில்லை. அதேபோல் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து கூடுதல் கவனத்தை  பேரிடர் மேலாண்துறை கவனம் செலுத்த வேண்டும். உணவு, தங்குமிடம், மின்சாரம் ஆகியவை கண்காணிக்க வேண்டும் தற்போது பருவமழை காரணமாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது இதற்கெல்லாம் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் இல்லை. மரியாதைகுரிய  தலைவர் ஒரு கேள்வி கேட்டால் அவர்களுக்கு வேலை வெட்டி இல்லை அதனால் அறிக்கை கொடுக்கிறார்கள் என்று முதலமைச்சர் அடாவடியாக பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகு அல்ல. இன்றைக்கு முதலமைச்சர் சொல்வதும், அறிக்கையில் கொடுப்பதும் பார்த்தால் ஏட்டிக்கு போட்டியாக களத்தில் உள்ளது.
 

அநாகரிகமான அரசியலுக்கு எடுத்துக்காட்டாகும்

 
இன்றைக்கு தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருக்கிறது இதனால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை விடப்பட்டிருக்கிறது, சிவகங்கை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தெற்கு வங்க கடல் மற்றும் பூமத்தியரேகையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியிலே நிலை கொண்டிருக்கிறது. இன்று வடமேற்கு திசையில் தமிழகம் இலங்கையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வழிவடையும் அதாவது காற்றுக்கு தாழ்மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இது புயல் சின்னத்திற்கு முந்திய நிலையை நாம் பார்க்கிறோம். தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக தமிழகத்தினுடைய கடலோர மாவட்டங்களில அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று எச்சரிக்கின்றார்கள். மக்களின் வயிற்றெரிச்சலை திசை திருப்ப பொறாமை என்று கூறுவதும், கேலியாக பேசுவதும், நையாண்டி பண்ணுவதும், முதலமைச்சர் பேசுவது அநாகரிகமான அரசியலுக்கு எடுத்துக்காட்டாக அமையும்” என்றார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget