மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் 26, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
* பழங்காநத்தம் அக்ரஹாரம்,
* பசும்பொன் நகர்,
* பத்திரப்பதிவு அலுவலகம்,
* பஸ் ஸ்டாண்ட் முதல் 6 தெருக்கள்,
* நேரு நகர், * மாடக்குளம் மெயின் ரோடு,
* கந்தன் சேர்வை நகர்,
* தேவி நகர்,
* கிருஷ்ணா நகர்,
* நமச்சிவாய நகர்,
*ஐஸ்வர்யா நகர்,
* சொரூப் நகர்,
* பெரி யார் நகர்,
* மல்லிகை கார்டன்,
* அய்யனார் கோவில்,
* அருண் நகர்,
*அவர் லேடி பள்ளி,
* காயத்ரி தெரு,
* பிரீத்தம் தெரு,
* உதயா டவர்,
* துரைச் சாமி நகர்,
* கோவலன் நகர்,
* ஒய்.எம்.சி.ஏ நகர்,
* இ.பி. காலனி,
* அழகப்பன் நகர்,
* திருவள்ளுவர் நகர்,
* டி. பி. கே.ரோடு,
* யோகியார் நகர்,
*தண்டகாரன்பட்டி,
* முத்துப்பட்டி,
* அழகுசுந்தரம் நகர்,
* கென்னட் நகர்,
* புதுக்குளம்,
* பைக்கரா,
* பசுமலை,
*மூட்டா காலனி,
* விநாயகர் நகர்,
* பெத்தானி நகர்,
* கோபாலிபுரம்,
* விளாச்சேரி,
* திருநகர்,
* பாலாஜி நகர்,
*பாலசுப்ர மணியன் நகர்,
* ஹார்விபட்டி,
* மகாலட்சுமி காலனி,
* முனியாண்டிபுரம்,
* குறிஞ்சி நகர்,
*வேல்முருகன்நகர்,
* அருள்நகர்,
* கிரீன்வேஸ் அப்பார்ட்மென்ட்,
* நேதாஜி நகர்,
* ராம்நகர் சிருங்கேரி நகர்,
*பைபாஸ் ரோடு,
* தானத்தவம்,
* பொன்மேனி,
* ஜெய் நகர்,
* ராஜம் நகர்,
* ராகவேந்திரா நகர்,
* மீனாட்சி நகர்,
*பாம்பன் நகர்,
* திருமலையூர்,
* தியாகராஜர் பொறியியல் கல்லுாரி.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியாது.
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!