தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்ததால், அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயரத் தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் 122.30 கனடியாக உயர்ந்தது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம் எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் இருபோக விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஜூன் 1-ம் தேதி முதல்போக விவசாயத்திற்கு தமிழக அரசு சார்பில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தள்ளிப்போனதால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் வரத்து குறைந்தது. அதனால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வந்தது. விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இந்த சூழலில், கடந்த வாரம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்ததால், அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயரத் தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் 122.30 கனடியாக உயர்ந்தது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போகத்திற்கு 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 350 கன அடி தண்ணீரை இன்று முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்டு உள்ளது.

அணையிலிருந்து தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் ஆகியோர் முல்லைப் பெரியாறு தலை மதகு பகுதியில் இருந்து இன்று திறந்து வைத்தனர். இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் நன்செய் நிலங்களில் முதல்போக விவசாயத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும். தண்ணீரை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















