மேலும் அறிய
மதுரையில் மின் விநியோகம் நிறுத்தம்... நாளைய (22.07.2026) மின்தடை லிஸ்ட் இது தான் !
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நாளை 22-ஆம் தேதி மின் தடை ஏற்படவுள்ளதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை
Source : whatsapp
பின் வரும் வழிமுறைகளை பின் பற்றும் போது, குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜூலை 22, 2026) அன்று மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை மின் தடை ஏற்படவுள்ளது.
நாளை மின்தடை செய்யப்படும் பகுதி (22.07.2026) - காலை 9:00 - மாலை 5:00 மணி)
பாலமேடு நகர், மறவர்பட்டி, சத்திர ராமக வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, வுண்டன்பட்டி, தெத்துார், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனுார், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















