மேலும் அறிய

பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!

மாணவர்கள், இளைஞர்கள் போராட்ட தடை உத்தரவு சர்ச்சை: பின்வாங்கிய தமிழக அரசு- நடந்தது என்ன?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடை செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கல்லூரிக் கல்வித் துறை, கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக இதுகுறித்து கல்லூரிக் கல்வி ஆணையர் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

போராட்டங்களில் பங்கேற்கத் தடை

அதில், ’’இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் கூட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்’’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு கடும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணித்து ஒடுக்குவதா?  என்று TVK அரசுக்கு SFI கண்டனம் தெரிவித்தது.

SFI கண்டனம்

இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ’’இளைஞர்களின் அரசியல் பங்கேற்பையும் புதிய தலைமுறையின் குரலையும் முன்னிறுத்தி அரசியலுக்கு வந்ததாகக் கூறிக்கொள்ளும் TVK அரசு, இன்று ஆட்சியில் தனது நிர்வாகத்தின் மூலம் மாணவர்களின் அரசியல் பங்கேற்பைக் கண்காணிக்க அனுமதிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது போராட்ட உரிமை குறித்து பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்களின் போராட்ட உரிமையை கட்டுப்படுத்துவது இரட்டை நிலைப்பாடு அல்லவா?

அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் மாணவர்களுக்கு இருக்கும் உரிமை, அரசின் கொள்கைகளை எதிர்த்து கேள்வி எழுப்பும் மாணவர்களுக்கும் இருக்க வேண்டும். ஜனநாயகம் என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களின் கருத்தைக் கேட்பது அல்ல; ஆட்சியில் இருக்கும் அரசை தொடர்ந்து கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும், அமைதியான முறையில் எதிர்ப்பை பதிவு செய்யவும் மக்களுக்கு உரிமை இருப்பதுதான் ஜனநாயகம்.

மாணவர்கள் அரசின் கண்காணிப்புப் பொருட்கள் அல்ல; ஜனநாயகத்தின் செயல்படும் குடிமக்கள். மாணவர்களின் அரசியல் செயல்பாடுகளை கண்காணித்து அச்சுறுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். மாணவர்களின் குரலை ஒடுக்காமல், அவர்களின் ஜனநாயக உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்.

நாளை போராட்டம் அறிவிப்பு

எனவே, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பைக் கண்காணித்து தடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த உத்தரவு எந்த அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என்பதையும் முதலமைச்சரும் உயர்கல்வித்துறை அமைச்சரும் பொதுவெளியில் விளக்க வேண்டும். மாணவர்களின் அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது நிலைப்பாட்டை TVK அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தது.

இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி நாளை (20/08/2026) தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் போராட்டம் நடத்தவும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு அழைப்பு விடுத்து இருந்தது 

இந்த நிலையில், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக கல்லூரிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget