மேலும் அறிய

இராமநாதபுரம்: குளிர்காப்பு வாகனத்தால் மீனவ மகளிரின் வாழ்வு மலர்ச்சி!

மீன் விற்பனையாளர்களுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை பெற்ற பயனாளிகள் தங்கள் வாழ்வாதாரம் உயரும் என நெகிழ்ச்சி !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (20.07.2026) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், மீனவர், மீனவ மகளிருக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனத்தை மானிய விலையில் வழங்கினார்.

குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய வாகனம்
 
இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த 42 மீன் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கப்பட்டவுள்ளது. ஒரு வாகனத்தின் மொத்த விலையான ரூ.75272-ல் மகளிர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 60 சதவிகிதம் மானியமாக ரூ.45272- மற்றும் பொதுப்பிரிவினருக்கு 40 சதவிகித மானியம் ரூ.30272, வீதம் வழங்கி வந்த நிலையில் நடப்பாண்டில் 42 வாகனங்களுக்கு முதற்கட்டமாக பயனாளியின் பங்குத்தொகையானது கேட்பு வரைவோலையாக பெறப்பட்டு டாப்கோபெட் மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இன்று 6 குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன், வழங்கினார். மேலும் விரைவில் 36 நபர்களுக்கு விரைவில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கப்பட்டவுள்ளது என தெரிவித்தார்.
 
மீன்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்கிறேன்
 
இந்த குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் வழங்குவதால் நடந்து சென்று வியாபாரம் செய்யும் மீனவர் மற்றும் மீனவு மகளிர் மீன்பிடி தளங்களுக்கு விரைவில் சென்று மீன்களை கொள்முதல் செய்து அருகில் உள்ள கிராமங்களுக்கு உடனே சென்று தரமான மற்றும் சுகாதாரமான முறையில் மீன்களை விற்பனை செய்திட இயலும். இதனால் மீனவ மகளிரின் வாழ்க்கைத்தரம் உயரும் விற்பனையை வேகமாக முடித்து அவர்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம், மோர்பந்தல், உப்பூர் கிராமத்தை சேர்ந்த பயன்பெற்ற பயனாளி திருமதி.சமயதேவி அவர்கள் தெரிவிக்கையில், நான் தினமும் ஊர் ஊராக சென்று மீன் வியாபாரம் செய்யும் ஒரு அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த பெண், அன்றாட வியாபாரம் செய்யும் பணத்தை வைத்து தான் நான் என் குடும்பத்தையும் என் மகன் மகள் படிப்பு செலவிற்கும் என்னுடைய மருத்துவ செலவிற்கும் பயன்படுத்திக் கொள்கிறோம். நான் தினமும் சுமார் ஒரு 20 கிலோமீட்டர் தொலைவில் நடந்து சென்று சுமார் 25 கிலோ எடை உள்ள மீன்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்கிறேன். எங்களது குடும்பத்தை காப்பாற்றுகிறோம்.
 
அதிக அளவு கிலோ எடை கூடிய மீன்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்ய என்னால் முடிகிறது.
 
அப்போதுதான் மீன்வளத் துறையின் சார்பாக மானியத்தில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் கிடைக்கிறது என்று அறிந்தேன். உடனே மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு என்னுடைய மனுவை கொடுத்தேன். உடனடியாக நான் கொடுத்த மனுவிற்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனமும் குளிர்காப்பு பெட்டியும் கொடுத்தார்கள். இந்த வாகனத்தினால் நான் மிகவும் பயன்பெற்று வருகிறேன். இப்போதெல்லாம் தினமும் சுமார் 60 கிலோ மீட்டர் என்றால் பயணிக்க முடிகிறது. அதிக அளவு கிலோ எடை கூடிய மீன்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்ய என்னால் முடிகிறது. இதனால் என் குடும்ப செலவு, என் மகள் மகன் படிப்பிற்கு, என்னுடைய மருத்துவ செலவு அனைத்திற்குமே பயன்படுத்த முடிகிறது. இப்போதெல்லாம் மீன்களை அதிகமாக எடுத்துச் சென்று வியாபாரம் செய்ய முடிகிறது. அதிக தூரமும் பயணிக்க முடிகிறது. இதன் மூலம் எனது குடும்பத்தினரும் நானும் பயன் பெறுகிறோம். எனக்கு மானியத்துடன் கூடிய இந்த இருசக்கர வாகனமும் குளிர்காப்பு பெட்டியும் வழங்கிய தமிழக அரசுக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

தலைப்பு செய்திகள்

இராமநாதபுரம்: குளிர்காப்பு வாகனத்தால் மீனவ மகளிரின் வாழ்வு மலர்ச்சி!
இராமநாதபுரம்: குளிர்காப்பு வாகனத்தால் மீனவ மகளிரின் வாழ்வு மலர்ச்சி!
தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?
தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?
அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
அதிரடி அறிவிப்பால் விருத்தாசலம் விவசாயிகள் மகிழ்ச்சி! 48 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
விவசாயிகள் கவனத்திற்கு: குறுவை பருவத் தோட்டக்கலை பயிர் காப்பீடு - முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
Embed widget