மேலும் அறிய

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்

IPL 2027 Schedule: வரும் 2027ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கி, எத்தனை போட்டிகள் நடைபெறும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL 2027 Schedule: வரும் 2027ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் பரிசீலனை நடைபெற்று வருகிறதாம்.

2027ம் ஆண்டு ஐபிஎல் தொடர்:

இந்தியாவை தாண்டி சர்வதேச கிரிக்கெட் திருவிழாவாக இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் உருவெடுத்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு இந்த தொடரானது தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 20-வது சீசனை நெருங்கும் நிலையில், கடுமையான கோடை வானிலை மற்றும் பருவமழைக்கு முந்தைய மழையைச் சமாளிப்பதற்காக, போட்டி நடைபெறும் கால அட்டவணையில் பெரிய மாற்றங்களைச் செய்வது குறித்து பிசிசி தீவிரமாக பரிசீலித்து வருகிறதாம். அந்த வகையில் அடுத்த ஆண்டு தொடருக்கான அட்டவணை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

2027ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான உத்தேச அட்டவணை:

ஆரம்பத்தில் ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டம் (FTP) 2027, மார்ச் 14 முதல் மே 30 வரையிலான காலவரம்பை வரையறுத்திருந்த நிலையில், செயலாளர் தேவாஜித் சாய்கியா உள்ளிட்ட பிசிசியின் உயர் அதிகாரிகள், அடுத்த ஐபிஎல் சீசனை சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடத்துவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

உத்தேச தொடக்கத் தேதி: மார்ச் 10, 2027

உத்தேச இறுதி போட்டிக்கான தேதி: மே 15, 2027

காலநிலை காரணமாக நடவடிக்கை:

வழக்கமான பாணியாக இல்லாமல் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப் போட்டியை மே மாத இறுதியில் இருந்து மாற்றுவதற்கு, வட/மேற்கு இந்தியாவில் நிலவும் கடுமையான வெப்ப அலைகளைத் தவிர்ப்பதுடன், மே மாதத்தின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை நடக்கும் ப்ளேஆஃப் போட்டிகளை அடிக்கடி சீர்குலைக்கும் பருவமழை பாதிப்பை தவிர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

மொத்தப் போட்டிகள் 74 போட்டிகள் (70 லீக் சுற்றுப் போட்டிகள் + 4 பிளேஆஃப் போட்டிகள்)

மொத்த அணிகள்: 10 

போட்டிகளின் எண்ணிக்கை உயருமா?

2023-2027 சுழற்சிக்கான ஆரம்ப ஊடக உரிமை ஒப்பந்தங்கள், லீக் கட்டத்தை 84 அல்லது 94 போட்டிகளாக விரிவுபடுத்த வாய்ப்பு அளித்து இருந்தாலும், 2027 சீசனில் 74 போட்டிகளே நடைபெறும் என பிசிசி உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இருதரப்புப் போட்டிக் கால அட்டவணைகள் மற்றும் வீரர்களின் பணிச்சுமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய விளையாட்டு வாரியங்கள் சர்வதேசப் போட்டி அட்டவணைகளை ஒருங்கிணைக்கும் நிலையில் -போட்டிக்கான கால அட்டவணையை 60 நாட்களுக்கும் அதிகமாக விரிவுபடுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளன.

இதையும் படியுங்கள்: CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை

ஓய்வு பெறும் ஜாம்பவான்கள்?

ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து முழுமையாக ஒய்வு பெற்ற முன்னாள் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். காயம் காரணமாக கடந்த சீசனில் முழுமையாக விளையாடாத நிலையில், அடுத்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்காக தயாராகி வரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றோர்களும், அடுத்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து வெளியேறி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த சீசனுடன் ஐபிஎல் தொடரை கட்டி ஆண்ட மூன்று ஜாம்பவான்களும் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஒய்வு பெறக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget