மேலும் அறிய
மதுரையில் நாளை (10.07.2025) இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்.. லிஸ்டை செக் பண்ணுங்க !
Madurai Power Shutdown: மதுரையில் நாளை (10.07.25) மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் பல்வேறு பகுதியில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்தடை
Source : whats app
Madurai Power Shutdown: மதுரையில் பல்வேறு பகுதிகளில் நாளை (10.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி - Madurai Power Shutdown
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
பாலமேடுமெயின் ரோடு, சொக்கலிங்கநகர் 1வது தெருமுதல் 7வது தெரு வரை பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புது விளாங்குடி கூடல்நகர், RMSColony, சொக்கநாதபுரம், ராஜ்நகர, பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசிவீதி, திண்டுக்கல் மெயின்ரோடு விஸ்தார குடியிருப்பு, பரவைசந்தை, தினமணிநகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடிபிரிவு, லெட்சுமிபுரம்.
பனையூர் - கீழடி
பனையூர், சொக்கநாதபுரம், சாமநத்தம், பெரியார்நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி
பொதுமக்கள் கவனத்திற்கு: நாளை (10.07.25) மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















