மேலும் அறிய

TTF Vasan: டி.டி.எஃப் வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க மதுரை காவல்துறை நோட்டீஸ் 

டி.டி.எஃப் வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, வாசனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கெஞ்சினார்கள்.

மதுரை நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார். அப்போது 3 நாட்களுக்குள் செல்போனை ஒப்படைக்க டி.டி.எஃப் வாசனுக்கு காவல்துறை நேரில்  நோட்டீஸ் வழங்கியுள்ளது.
 

மதுரை வழக்கில் டி.டி.எஃப் வாசன்

 
டி.டி.எஃப் வாசன் என்ற பிரபல யூடியூபர் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார். தன்னுடைய பைக் ஓட்டும் திறமையை கொண்டும், அவரது வசீகர பேச்சாலும் மிகப்பெரும் இளைஞர் படையை ரசிகர்களாக  கொண்டுள்ளார். சினிமா பிரபலங்களைப் போல் செல்லும் இடமெல்லாம் வரவேற்புகளை பெற்று வருகிறார். ஆனால் இவரது செயல்பாடுகளால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லக் கூடும் என பல்வேறு விமர்சனங்களும் உள்ளது. அதே சமயம் வேகமாக பைக் ஓட்டும் போது விபத்தில் சிக்கிய வாசன் 10 ஆண்டுகள் பைக் ஓட்டக் கூடாது என நீதிமன்றம் தடை வித்துள்ளது. இதனால் அடிக்கடி வழக்கு வாங்கும் நபர் என்று டி.டி.எஃப் வாசன் கிண்டல் அடிக்கப்படுகிறார். நீதிமன்றம் பைக் ஓட்ட தடையால் தற்போது கார் மூலம் ஊர் சுற்றி வரும் வாசன், தற்போது மதுரையில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார். அப்போது 3 நாட்களுக்குள் செல்போனை ஒப்படைக்க டி.டி.எஃப் வாசனுக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
 

காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட டி.டி.எஃப் வாசன்

 
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு மே 15-ம் தேதி டி.டி.எஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை அண்ணாநகர் காவல் துறையினர் டி.டி.எஃப் வாசனை கைது செய்து, அவரது காரை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் டி.டி.எஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது. மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம். இதில், “10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என, உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார்.
 

போட்டோ எடுக்க கெஞ்சிய ரசிகர்கள்

 
அப்போது வழக்கு விசாரணைக்காக டி.டி.எஃப் வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென, காவல்துறையினர் நேரில் நோட்டீஸ் வழங்கினார்கள். அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.டி.எஃப் வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, டி.டி.எஃப் வாசனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கெஞ்சினார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட வந்துள்ளதால் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டாம் என டி.டி.எஃப் வாசனும், அவரது வழக்கறிஞர்களும் அறிவுறுத்தல் செய்தனர்.
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget